Joseph Vital Prasath

Joseph Vital Prasath I love my Catholic Church

தவக்கால சிந்தனைகள் 24 :இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட பத்தாம் ஸ்தலம்...இயேசு நாதர் சுவாமியின் ஆடைகளைக் களைகிறார்கள்..நம் நே...
23/03/2026

தவக்கால சிந்தனைகள் 24 :

இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட பத்தாம் ஸ்தலம்...

இயேசு நாதர் சுவாமியின் ஆடைகளைக் களைகிறார்கள்..

நம் நேச இயேசு ஆண்டவர் ஏன் ஆடைகள் உரியப்பட்டு அவமானப்படுத்தபட வேண்டும்?

நாம் மறைவில், நான்கு சுவர்களுக்கு மத்தியில். நாம் இரகசியமாக செய்த பாவங்களுக்கு அவர் வெளிப்படையாக ஆடைகள் உரியப்பட்டு அவமானப் படுத்தப்படுகிறார். நாம் யாருக்கும் தெரியாது அல்லது தெரியக்கூடாது என்று இரகசியமாக செய்த பாவங்களுக்கு பரிகாரமாக நம் ஆண்டவர் அவமானப்படுத்தப்படுகிறார். நம் பாவங்களுக்காக, பாவமே செய்யாத கடவுள் பரிகாரம் செய்கிறார். நாம் யாருக்கும் தெரியாது என்று செய்த அனைத்துப் பாவங்களையும் நம் கடவுள் பார்த்துக் கொண்டுதானே இருந்தார். அப்போது அவர் மனது எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும். “என்னுடைய சாயலாக படைக்கப்பட்ட மனிதா ஏன் இப்படி பாவம் செய்து என்னை அவமானமும், அவசங்கையும் படுத்துகிறாய்” என்று வேதனை நெருப்பில் வெந்திருப்பார் அல்லவா?

அவர் ஆடை உரியப்படவில்லை; ஆடை உரிக்கப்பட்டார். அவர் உடம்ப்பில் கசையால் அடிக்கப்பட்டபோது ஏற்பட்ட காயங்கள், அவருக்கு அதன் பின்பு அவருடைய ஆடைகள் அணிவிக்கப்பட்டாலும் மேலும் காயங்களிலிருந்து வந்த இரத்ததால் ஆடைகள் அவருடைய திருக்காயங்களோடு ஒட்டிக்கொண்டு காய்ந்து போயிருந்ததால் இப்போது ஆடைகள் முரட்டுத்தனமாக உரிக்கப்படும்போது மீண்டும் அவருடைய காயங்கள் திறக்கப்பட்டு இரத்தம் வெளிவருகிறது. வலியால் துடிக்கிறார். அவர் ஆடைகள் உரிக்கப்படும்போது வலியை விட அவமானமே அதிக மன வேதனையைத் தருகிறது. கூணி குருகி நிற்கிறார். அப்போது அவமானத்தால் துடித்த இன்னினொரு இருதயம் நம் நேசத்தாயின் இருதயம்.

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல நாம் பாவம் செய்தால் பாதிக்கப்படுவது, குத்தப்படுவது இரண்டு இருதயங்கள். இங்கே இரண்டு இருதயங்கள் கூணி குருகி அவமானப்படுகிறது. தாயின் இருதயம் பதருமே, உடனே தன்னுடைய தலை உள் முக்காட்டுத்துணியை உடனடியாக எடுத்து தன்னுடைய புதல்வனின் மானத்தைக் காப்பாற்றுகிறார். மகனுடைய கோலத்தைப்பார்த்து பதை பதைக்கிறார். இப்போது மாதா பேசுகிறார்,

“ என் மகனே, என் மகளே, கற்பு என்பது எப்பேற்பட்ட பொக்கிஷம் தெரியுமா? கற்பு என்ற ஒன்று இருக்கிறதே நிறைய பேருக்கு மறந்து போய்விட்டது. கற்பிற்கு எதிரான சிந்தனைகளும், செயல்களும் எல்லா இடங்களில் மலிந்து காணப்படுகிறது. தவறான பார்வை, சிந்தனை, செயல்களில் கற்பு இல்லை. செயல்களில் ஒழுக்கம் இல்லை, ஆடைகளில் கண்ணியம் இல்லை. பேச்சில் தூய்மை இல்லை. இப்போது ஒழுக்கக் கேடுதான் நாகரீகமாகிப்போனது. நீங்கள் கற்பிற்கு எதிராக செய்யும் ஒவ்வொரு பாவமும் எங்கள் இருதயங்களை ஈட்டியாக வந்து குத்துகிறின்றன. எங்கள் இருதயங்கள் முட்களால் நெருக்கப்படுகிறது. இந்த கல்வாரி வேதனையைப் போல அணலில் இடப்பட்ட புழுவாக எங்கள் இருதயங்கள் துடிக்கின்றன”

உடனடியாக உங்கள் பரிசுத்த கற்பிற்கெதிரான பாவங்களை விட்டொழியுங்கள்; பரிசுத்த ஆடை உங்கள் உள்ளங்களிலும், கண்ணியமான ஆடை உங்கள் உடல்களிலும் அணியப்படட்டும், உங்கள் பாவங்களை விட்டுவிட்டு எங்கள் வேதனைகளிலிருந்து எங்களுக்கு விடுதலைத் தாருங்கள்.

எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

தவக்கால சிந்தனைகள் 23 :இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட ஒன்பதாம் ஸ்தலம் ..இயேசு நாதர் சுவாமி சிலுவையின் பாரத்தால் மூன்றாம் மு...
21/03/2026

தவக்கால சிந்தனைகள் 23 :

இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட ஒன்பதாம் ஸ்தலம் ..

இயேசு நாதர் சுவாமி சிலுவையின் பாரத்தால் மூன்றாம் முறை முகம் குப்புற விழுகிறார்..

என்ன செய்வது மனதில் இருக்கும் ஊக்கத்தை சில நேரங்களில் உடலில் இருக்கும் வலுவின்மை வென்று விடுகிறது. ஆம் நம் ஆண்டவரின் உள்ளத்திலிலும், இருதயத்திலும், ஆன்மாவிலும் தான் தன் மக்களுக்காக சிலுவையில் மரிக்க வேண்டும், என் கடைசி சொட்டு இரத்தத்தையும் அவர்களுக்காக சிந்த வேண்டும். விரைவில் எப்படியாவது கல்வாரிக்கு தன் சிலுவையைத் தூக்கிக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்று துடிக்கிறார்; ஆனால் உடலில் உள்ள இயலாமை அவரைத் தடுக்கிறது.

ஆண்டவர் இயேசு பேசுகிறார் :

"என் பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற வேண்டும்; என் மனுமக்களை பாவங்களிலிருந்தும், நரகத்திலிருந்தும் விடுவிக்க வேண்டும் என்ற ஆவல் என் உள்ளத்தில் பற்றியெறிகிறது. என்னால் முடிந்த மட்டும் வலுவை வரவழைத்து கல்வாரியை பார்த்துக் கொண்டே முன்னேறுகிறேன். ஆனால் என் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது.

ஏற்கனவே உங்களுக்காக கசையடிகள், இரகசிய உபாதைகள் என்று பாதி இரத்ததை சிந்திவிட்டேன். மீதி இரத்தத்தையும் சிந்த தயாராக இருக்கிறேன். ஆனால் என் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. இரத்தம் வெளியேறியதாலும், உணவு, நீர் எதுவும் பருகாததாலும் ஏறக்குறைய எல்லா சக்திகளையும் இழந்துவிட்டேன். மேலும் சிலுவையின் பாரமும் என்னை அழுத்துகிறது. முள்முடி வேறு என்பார்வையைக் குறைக்கிறது. என்னால் சரியாக பார்க்க முடியவில்லை. எல்லாம் சேர்ந்து என்னை மூன்றாம் முறையாக அதுவும் முகம் குப்புற என்னை வீழ்த்திவிட்டது.

சிலுவையோடு நான் கீழே விழுந்துவிட்டேன். அதையும் நான் உங்கள் பாவங்களுக்கு பரிகாரமாக என் பிதாவிடம் ஒப்புக்கொடுக்கிறேன்.

என் சகோதரனே, சகோதரியே, இது எதற்காக என்று யோசிக்கிறாயா? நீ மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுகிறாயே, எத்தனை முறை பாவசங்கீர்த்தனம் செய்தாலும் செய்த பாவத்தையே திரும்ப, திரும்ப செய்கிறாயே, நீ மீண்டும், மீண்டும் பாவத்தில் விழுகிறாய். அதனால் நான் மீண்டும் மீண்டும் விழுகிறேன். ஒன்பதாம் ஸ்தலத்தில் நான் விழுந்தது நீ சாவான பாவத்தில் வீழ்ந்தே கிடப்பதற்கு பரிகாரமாக. நீ பாவத்தில் இருந்து எழுவதற்காக நான் விழுகிறேன். எனக்கு என் மிக கொடுமையான இந்த பாடுகளோ, இப்போது நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் உடல் வேதனையோ, மன வேதனையோ உன் பாவங்களால் நான் அனுபவிக்கும் வேதனைகளை விட எனக்குப் பெரிதாக தெரியவில்லை. இந்த வேதனைகளை விட உன் பாவங்கள் எனக்கு தரும் வேதனையே பெரிதாகவும், என்னால் தாங்க முடியாததுமாக இருக்கிறது.

ஏனென்றால் நீ நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யாமல், உன் பாவங்களுக்காக மனம் வருந்தாமல் நீ மரித்தால் நீ என் எதிரியின் வீடான நரகத்திற்கு அல்லவா சென்று விடுவாய். அங்கு நெருப்பில் அல்லவா நீ எரிவாய். என்னுடைய சாயலாக உன்னைப் படைத்தேன்; அழிவில்லாத ஆன்மாவாக உன்னைப் படைத்தேன். நீ என்றும் என்னோடு மோட்சத்தில் சந்தோசமாக இருக்க உன்னைப் படைத்தேன். ஆனால் நீ உன் முடிவில்லாத வாழ்வை நிம்மதியற்ற, எரியும் நெருப்போடு பிசாசுகளோடு முடிவில்லா வேதனையிலா அதை அனுபவிக்க வேண்டும்..

என்னுடைய இந்த விழுதல் என்கிற வீழ்ச்சி உன் பாவங்களிலிருந்து எழுதல் என்கிற எழுச்சியாக இருக்க வேண்டும். எழுவாயா? என் கடவுளாம் இயேசுவே, இனி நீங்கள் எனக்காக பாடுகள் படத் தேவையில்லை. நான் எழுந்துவிட்டேன்; இனி நான் பாவம் செய்ய மாட்டேன்; இப்போது நான் பாவசங்கீர்த்தன தொட்டியை நோக்கி ஓடுகிறேன். வந்து உம்மைப் பின் செல்வேன் என்று சொல்வாயா? என் சகோதரனே சகோதரியே….”

எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

புனித சூசையப்பர்1. திருக்குடும்பத்தின் பாதுகாவலர் ;  2. குடும்பங்களின் பாதுகாவலர் ;3. நன்மரணத்திற்குப் பாதுகாவலர் ; ( ஏன...
19/03/2026

புனித சூசையப்பர்

1. திருக்குடும்பத்தின் பாதுகாவலர் ;
2. குடும்பங்களின் பாதுகாவலர் ;
3. நன்மரணத்திற்குப் பாதுகாவலர் ; ( ஏனெனில் இவரது மரணத்தின் போது நம் அன்னையும் , நமது ஆண்டவரும் இவருக்கு அருகில் இருந்தனர் )
4. உழைப்பாளர்களின் பாதுகாவலர் ; ( திருக்குடும்பத்தைக் காக்க அயராது உழைத்தவர் ; எனவே எல்லா உழைப்பாளர்களுக்கும் பாதுகாவலர் )
5. பொறியியலாளர்களின் , பொறியியல் வேலை செய்பவர்களின் பாதுகாவலர்

இறை அனுபவம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் புனித சூசையப்பரைப் போல இருக்க வேண்டும்.
எவ்வாறெனில் ஆண்டவரையும் நம் அன்னையையும் அருகே காண வேண்டும் ; அவர்களோடு இருக்க வேண்டும் ; அவர்களுக்காக உழைக்க வேண்டும் ; அவர்களது மகிழ்ச்சியைத் தேட வேண்டும் ; அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் ;கேள்விகள் இன்றி ஆண்டவரையும் , அன்னையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் ;

எல்லாவற்றிக்கும் மேலாக , விவிலியத்தில் நீங்கள் எங்கேயும் ' சூசை கூறினார் ' என்று ஒரு வார்த்தை கூட இருக்காது ; இறை அனுபவம் அப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு வார்த்தை கூட பேச வேண்டிய அவசியம் இல்லாதபடி , பேச முடியாதபடி அவர் இறை அனுபவத்தில் நிறைந்திருந்தார் .

தவக்கால சிந்தனைகள் 22 :இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட எட்டாம் ஸ்தலம் – தொடர்ச்சி..“இந்த பச்சை மரத்திற்கே இப்படிச் செய்கிறார...
19/03/2026

தவக்கால சிந்தனைகள் 22 :

இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட எட்டாம் ஸ்தலம் – தொடர்ச்சி..

“இந்த பச்சை மரத்திற்கே இப்படிச் செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்திற்கு என்ன நேருமோ ? “

ஆண்டவர் இயேசுவின் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் என்னவாக இருக்கும்?...

பச்சை மரம் : மரங்களிலும், செடிகளிலும் இருக்கும் பச்சையை நினைவு கூறுங்கள். பச்சை என்பது செழுமையைக் குறிக்கிறது. இது ஆன்மீக செழுமையைக் குறிக்கிறது. இயேசு சுவாமி எப்போதும் பிதாவோடு ஒன்றித்திருந்தார்; எல்லாவற்றையும் பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தார்: எல்லாவற்றிற்கும் பிதாவைச் சார்ந்திருந்தார். எல்லாவற்றிலும், நேர்மையையும், பரிசுத்தத்தையும், பரிசுத்த கற்பையும் கடைப்பிடித்தார்.

ஆன்மீகம் என்பது கடவுளை வழிபடுவதும்; ஜெபங்கள் ஜெபிப்பது மட்டும் அல்ல. நேர்மையாக இருத்தல், ஒழுக்கமாக இருத்தல், பரிசுத்தத்தையும், தாழ்ச்சியையும் கடைப் பிடித்தல், கடவுளுக்கும், தன்னுடைய குடுமபத்திற்கும், இந்த சமுதாயத்திற்கும் பிரமாணிக்கமாய் இருத்தல். எல்லாவித சூழ்நிலையிலும் பரிசுத்தமாய் இருத்தல், கடவுளையும், பிறரையும் நேசித்தல், உதவி செய்தல், பிறரை மன்னித்தல், குறைகளோடு ஏற்றுக்கொள்ளுதல் இந்த அனைத்துமே ஆன்மீகம்தான் அதாவது பச்சைத்தன்மை, பசுமை உள்ள ஆன்மாக்கள்.

“பச்சைத்தன்மை உள்ள பசுமையான அதாவது பச்சை மரமான எனக்கே இப்படிச் செய்கிறார்கள் என்றால் பட்ட மரங்களான உங்களுக்கு என்ன நேருமோ? “ இங்கே பாருங்கள். பட்ட மரமான உங்களுக்கு எப்படிச் செய்வார்கள் என்று கேட்கவில்லை. “என்ன நேரூமோ?” என்றுதான் கேட்கிறார். இங்கே நாம் சிந்திக்கவும், தியானிக்கவும் வேண்டும்.

இங்கே நம் சிந்தனைக்கு வர வேண்டியது மோட்சம், நரகம், உத்தரிக்கும் என்னும் விசுவாச சத்தியங்கள் மட்டும்தான். அதற்கு முன் நம் நினைவுக்கு வரவேண்டிய வசனங்கள் “ உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் “ என்ற வசனங்கள்தான் . இந்த வசனங்கள் எல்லாம் இன்னும் ஒரு இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து படித்தாலும் அப்போதும் அப்போதுள்ள சூழ்நிலைக்கு பொருந்தும். அதுதான் பைபிள். பைபிள் இது எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் நூல்.

உங்களுக்காக நாம் இந்த பாரமான சிலுவையைச் சுமந்து அதில் மரித்து உங்களை மீட்கப் போகிறேன். ஆனால் என்னுடைய பாடுகள் எதற்காக, நான் இரத்தம் சிந்துவது எதற்காக, நான் உங்களை மீட்டது எதற்காக, எதிலிருந்து மீட்டேன் என்பதை நீங்கள் உணராமல், இன்று செய்வதைப் போல மனம் மாறாமல், நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யாமல் தவக்காலத்தைக் கூட ஒழுங்காக பயன்படுத்தாமல் உச்சுக் கொட்டிக்கொண்டு சென்றால், நாளை உங்களுக்கு என்ன நேரூமோ? நீங்கள் நரகம் செல்ல நேரூமோ? ஆகையால் நீங்களும் மனம் திரும்பி உங்கள் பிள்ளைகளையும் மனம் திருப்ப இப்போதே தவம் செய்யத் துவங்குங்கள். உங்கள் பிள்ளைகளையும் தவம் செய்ய பழக்குங்கள். ஆகையினால் உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்றார்..

புரிந்து கொண்டோமா?

எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்..

இயேசுவுக்கே புகழ் !
மரியாயே வாழ்க !

தவக்கால சிந்தனைகள் 21 :இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட எட்டாம் ஸ்தலம்...இயேசு நாதார் சுவாமி தனது பின்னால் அழுது கொண்டு வந்த ...
17/03/2026

தவக்கால சிந்தனைகள் 21 :

இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட எட்டாம் ஸ்தலம்...

இயேசு நாதார் சுவாமி தனது பின்னால் அழுது கொண்டு வந்த யூதப் பெண்களுக்கு ஆறுதலும் அறிவுரையும் சொல்லுகிறார்…

ஆண்டவர் இயேசுவை நேசித்தவர்கள், அவரின் வார்த்தைகளுக்குச் செவி கொடுத்தவர்கள், அவரின் பல வல்ல செயல்களைப் பார்த்தவர்கள், அவரை மெசியா என்றும், கடவுளின் மகன் என்றும் விசுவசித்தவர்கள், இதில் ஆண்டவர் இயேசுவின் மேல் பரிதாபப்பட்டு வருபவர்கள் இவர்கள்தான் ஆண்டவர் இயேசுவின் பின்னால் அழுதுகொண்டு வந்தவர்கள். இவர்கள் குறைந்தபட்சம் ஆண்டவர் இயேசுவைப் பழிப்பவர்கள் மத்தியில், அவரைத் தூற்றுபவர்கள் மத்தியில், அவரை எள்ளி நகையாடியவர்கள் மத்தியில், முன்பு ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடிவிட்டு அவரின் புதுமைகளை அனுபவித்துவிட்டு இப்போது ஆண்டவரை அவசங்கைப்படுத்தும், கேவலப்படுத்தும் கூட்டத்தின் மத்தியில் அவர்கள் இல்லாமல் இருப்பதற்காக அவர்களை நாம் பாராட்டலாம்.

ஆண்டவர் இயேசுவுக்கு ஒரு பழக்கம் உண்டு. அவரை நேசிப்பவர்கள், அவருக்கு ஏதாவது ஒரு வழியில் உதவி செய்பவர்களுக்கு பதில் உதவி, பதில் அன்பு செலுத்த அவர் ஒருபோதும் தவறுவது இல்லை. இப்படி இருக்கும் போது கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

இந்த உலகத்தில் ஆண்டவர் இயேசுவை அதிகமாக நேசித்தது யார்? அதிகமாக அவரை பராமரித்து, பாலூட்டி சீராட்டி இந்த தரணிக்கு அவரைக் கொடுத்தவர் யார்? அவருக்காக தன்னையே முழுவதும் அர்ப்பணித்தது யார்? அதிலும் குறிப்பாக கடவுளின் இந்த மீட்புத்திட்டத்திற்கு உறுதுணையாகவும், அர்ப்பண உணர்வோடு அனைத்தையும் செய்தும், தானும் அதில் பங்கு கொண்டும் இந்த கல்வாரியில் கூட ஆண்டவர் இயேசுவுக்கு துணையாகவும், அவரோடு பிரமாணிக்க உள்ளத்தோடு பயணிப்பவர் யார்? நம் பரிசுத்த மகா தேவதாயார் அல்லவா?

அப்படியானால் தன் நேசத் தாயாருக்கு எவ்வளவோ அளவில்லாமல் கொடுத்திருப்பார்; அர்ச்சித்திருப்பார் அல்லவா? தான் பிறக்கும் முன்பும், தான் பிறந்த பின்பும் எவ்வளவோ ஆசீர்வாதங்களை, வரங்களைக் கொடுத்திருப்பார் அல்லவா? எவ்வளவு என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? நாம் நினைப்பதற்கும் அதிகமாக, கற்பணைக்கெட்டாத ஆசீர்வதங்களை கொடுத்திருக்கிறார் நம் பரமன்.

பிரிவினை சகோதர-சகோதரிகளே இந்த இடத்தில் நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.

இந்த ஸ்தலத்தில் மட்டுமல்ல இன்றும் ஆறுதல் தேவைப்படுவது யாருக்கு?

ஆண்டவர் இயேசுவுக்கு மட்டுமல்ல நம் பரிசுத்த தேவமாதாவுக்கும்தான்...

எருசலேம் மகளிரே, இந்த உலகத்தில் உயிர் வாழ்வோரே, ஆண்டவர் இயேசுவைக் கடவுளாக கொண்டவர்களே,

ஆண்டவர் இயேசுவின் இருதயத்தை நேசிப்பது போல இந்த மாசற்ற இருதயமான மகா பரிசுத்த மாதாவின் இருதயத்தையும் நேசியுங்கள், இந்த இருதயத்திற்கும் ஆறுதல் தாருங்கள் என்று கேட்பது ஆண்டவர் இயேசு; ஏனென்றால் அவர் மட்டுமே தன் தாயாரின் இருதயத்தை முழுவதும் அறிந்தவர்கள்.

நம்மால் இந்த இரண்டு இருதயத்திற்கும் ஆறுதல் கொடுக்க முடியுமா?

இந்த எட்டாம் ஸ்தலத்திலும் மாதாவை நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்க முடியவில்லை..

" எனக்காக அழாதீர்கள் உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளாகவும் அழுங்கள்"

எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்..

இயேசுவுக்கே புகழ் !
மரியாயே வாழ்க!

தவக்கால சிந்தனைகள் 19 :இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட ஆறாம் ஸ்தலம் – தொடர்ச்சி..வெரொனிக்காம்மாள் ஆண்டவர் இயேசுவின் திருமுகத...
13/03/2026

தவக்கால சிந்தனைகள் 19 :

இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட ஆறாம் ஸ்தலம் – தொடர்ச்சி..

வெரொனிக்காம்மாள் ஆண்டவர் இயேசுவின் திருமுகத்தைத் துடைக்கிறாள்..

வெட்கப்படுதல், கூச்சப்படுதல், சாட்சியம் சொல்ல தயங்குதல் என்று எண்ணற்ற தயக்கங்கள் இருக்கிறது. ஏன் நமக்கு இந்த தயக்கங்கள்?. நமக்கு சகலமும் கடவுள்தானே? நமக்கு அனைத்தையும் தருபவர் அவர்தானே? நாம் வாழ்வதும் இருப்பதும் இயங்குவதும் அவரால்தானே? அப்புறம் ஏன் அறிக்கையிட தயக்கம்?

நாம் வெட்கப்பட்டால் அவரும் வெட்கப்படுவேன் என்று சொல்கிறார்.. உங்களை எனக்குத்தெரியாது என்று சொல்வேன் என்கிறார் (மத் 10 : 32-33). இந்த வெரோணிக்காவும் இப்படி நினைத்திருக்கலாம்.

“ நான் இப்படிச் செய்தால் மற்றவர்கள் என்னை தவறாக நினைப்பார்களோ, மற்றவர்கள் இவரைப் பாவி என்கிறார்கள்; இவர் கடவுள் அல்லவா? ஆனால் நான் இப்படிச் செய்தால் என்னையும் பாவியாக்கி விடுவார்களே! அவர் நல்லவர் எந்த குற்றமும் செய்யாதவர், பல நன்மைகளைச் செய்தவர், அவர் கடவுள். ஆனால் மற்றவர்கள் எல்லாரும் அவரை நீசன் என்றும், பிதாவிற்கு எதிரானவன் என்றும், அவர் ஒரு ஈனப்பிறவி, சாவுக்குரியவன் என்று நினைக்கிறார்களே, அப்படி இருக்க நான் சென்று அவர் முகத்தை துடைத்தால் என்னையும் அவரோடு உள்ளவள் என்று நினைத்து என்னையும் கொன்றுவிடுவார்களோ? ஏனென்றால் அவரோடு இருந்தவர்கள் உயிருக்கு பயந்து ஓடிவிட்டார்களே, என் உயிருக்கு ஆபத்து வந்தால் என்ன செய்வது” என்று இப்படியெல்லாம் யோசிக்கவில்லை.

இப்போது ஆண்டவர் பேசுகிறார் :

“ என்னை நீங்கள் அதிகமாக அவசங்கைப்படுவது திவ்ய நற்கருணையில்தான். நீங்கள் உங்களை சரியாக தயாரிப்பதில்லை; மாதம் ஒருமுறை கூட பாவசங்கீர்த்தனம் செய்வதில்லை. அப்படியே பாவசங்கீர்த்தனம் செய்தாலும் மனஸ்தாப உள்ளத்தோடும், வருத்தத்தோடும் செய்வதில்லை. நீங்கள் உங்கள் அர்ச்சிக்கப்படாத கரங்களில் வாங்கி என்னை அவசங்கைப் படுத்துகிறீர்கள்; அதுவும் இடது கையில் என்னை வாங்குகிறீர்கள்; ஏன் ? காரணம் உங்களால் சொல்ல முடியுமா? நான் நோயைப் பரப்புகிறவனா? உங்கள் உயிரை வாங்குபவனா? நான் கடவுள் இல்லையா? நான் உங்களைக் காப்பாற்றும் கடவுளா? கைவிடும் கடவுளா?” நாளை உங்களைக் கேள்வி கேட்கத்தான் செய்வேன். நீங்கள் என் வெரோணிக்காள்போல் இல்லை. நாவில் வாங்கினால் பிறர் என்னைத் தவறாக நினைப்பார்களோ, கவுரவ குறைச்சலாக நினைப்பார்களோ, என்று நினைக்கிறீர்கள், என்னிடமே டீசன்சி பார்க்கிறீர்கள், இதேயே நான் உங்களிடம் பார்த்தால், பாவத்தோடும், உங்கள் அர்ச்சிக்கப்படாத கரங்களோடும் என்னை வாங்கும்போது எனக்கு எத்தகைய அறுவருப்பாக இருக்கும். வெரோணிக்கா, அன்று நீ எனக்கு அவசங்கைகளின் மத்தியில் துணிச்சலோடு வந்து எனக்கு ஆறுதல் கொடுத்தாய்; இன்று ஒரு சிலரைத் தவிர எனக்கு ஆறுதல் கொடுக்க ஒருவரும் இல்லை. அதாவது இப்போது என்னால் எந்த வெரோணிக்காவையும் பார்க்க முடியவில்லை”

எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

தவக்கால சிந்தனைகள் 18 :இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட ஆறாம் ஸ்தலம்...வெரொணிக்கா ஆண்டவர் இயேசுவின் திருமுகத்தைத் துடைக்கிறாள...
12/03/2026

தவக்கால சிந்தனைகள் 18 :

இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட ஆறாம் ஸ்தலம்...

வெரொணிக்கா ஆண்டவர் இயேசுவின் திருமுகத்தைத் துடைக்கிறாள்..

பெரிய வியாழன் அன்று அனுபவித்த சொல்லொன்னாத் துன்பங்களாலும், அடி, உதை வேதனைகளாலும், பெரிய வெள்ளி அன்று படைவீரர்கள் அவர் முகத்தில் துப்பி, முகத்தை மூடி அடித்ததாலும், முகத்தில் முள்முடியை வைத்து அடித்ததாலும், முதல் முறை தரையில் விழுந்ததாலும், முகம் பொழிவிழந்து, உருவமற்று இருக்கிறது.

எப்போதும் ஆண்டவர் இயேசுவின் முகத்தை பொழிவோடும், பிராகசத்தோடும், புண்ணகையோடும் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட வெரொணிக்காவிற்கு பொழிவிழந்து அலங்கோலமாக இருக்கும் அவள் போதகரின் முகத்தை இப்படிப் பார்க்க அவளுக்கு மனம் பொறுக்கவில்லை.

என் நேசரை, என் மெசியாவை, என் போதகரை இப்படியா அவர்கள் அலங்கோலப்படுத்தி இருக்கிறார்கள். மனது பொறுக்கவில்லையே என் ஆண்டவரே, என் இயேசுவே என்று ஓடோடி வருகிறாள். அந்தக் கூட்டத்தைக் கண்டும், படை வீரர்களைக் கண்டும், தலைமைக் குருக்களைக் கண்டும் அவள் அஞ்சவில்லை. படை வீரர்கள் கையில் பெரிய பெரிய ஈட்டிகள், இடையில் வாள், கரங்களில் சாட்டைகள் என்று அவர் அஞ்சும்படியாக இருக்கிறார்கள். ஆனால் வெரொணிக்கா எதைப் பற்றியும் கவலைப்படாமல் அழகான புதுத்துணியோடு, நெஞ்சில் துணிவோடு ஓடோடி வருகிறாள்; இந்த மழலையைத் தடுக்க யாருக்கும் மனம் வரவில்லை. துடைத்துவிட்டுப் போகட்டும் என்று கல்மனங்கள் கூட அனுமதிக்கிறது.

காரணம் வெரொணிக்காவின் முகத்தில் இருந்த நேசம், அன்பு, ஒளி, கணிவு, பரிதாபம், இரக்கம் எல்லாம் அவர்களை மவுனமாக்கிவிடுகிறது. அவர்களை மட்டுமல்ல நம் மாபரன் ஆண்டவர் இயேசுவையும்தான். தன்னை நித்தித்து அவமானப்படுத்தி, ஏச்சுகளும், பேச்சுகளும் காதைப் பிளக்கும் இந்த சூழ்நிலையில் அவர்கள் மத்தியில் அந்த கூட்டத்திலிருந்து ஒரு சிறிய பறவைபோல் ஈசலாக துடித்தவாறு தன்னைத் தேடி ஓடி வந்து பாசத்தோடு தன் முகத்தைத் துடைக்கும் இந்தச் சிறுமியின் அன்பை நினைத்து மகிழ்ச்சி அடைகிறார். இந்த சூழ்நிலையில் என்னை நேசிக்க என் தாய்க்கு அடுத்ததாக இந்த சேயும் இருக்கிறாளே என்று மகிழ்ந்து புண்ணகை பூக்கிறார் அந்த சிறுமியைப் பார்த்து.

அந்த அன்புக்கு அந்தத் துணியில் தன் முகத்தைப் பதித்து உடனே ஆட்டோ கிராப் போடுகிறார் நம் கடவுள். அந்த துணி புதுமைத் துணியாகவும், திருத்துணியாகவும் மாறிப்போனது.

இப்போது நம்மைப் பார்த்து பேசுகிறார் :

“ இந்த உச்சு கொட்டுபவர்கள் மத்தியில் வெரொணிக்கா உண்மையிலேயே வித்தியாசமாகத்தான் இருக்கிறாள்; செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம் என்று சொல்லிய என் அப்போஸ்தலன் சின்னபனின் வாக்குக்கேற்ப தன் விசுவாசத்தையும், நேசத்தையும் தன் தூய அன்பால் , செயலால் என் வெரொணிக்கா நிரூபித்துவிட்டாள். உன்மையிலேயே இந்த நேசப்பஞ்சத்தின் சூழலில், மனதாலும், உடலாலும், உடல் சோர்வாலும் நான் வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த சிறுமியின் சிறிய இந்த அன்புச்செயல் எனக்கு சிகரமாகத்தெரிகிறது. என்னை கல்வாரியை நோக்கி நடக்க எனக்கு ஊக்கமும், உற்சாகமும் தருகிறது. உன் அன்பிற்கு என் நெஞ்சத்திலிருந்து நன்றி வெரொணிக்கா..

இன்றும் என்னை நிந்தைக்கும், அவமானத்திற்கும், நன்றியற்ற கேட்டாலும், காட்டிக்கொடுக்கப்படுதலுக்கும் உள்ளாக்குகிறார்கள்..

இன்று நீ அந்த வெரொணிக்காவாக என்னுடைய இந்த நிந்தைகளைத் துடைக்க வருவாயா?

எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி, தயவாயிரும்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

தவக்கால சிந்தனைகள் 16 :இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட  நான்காம் ஸ்தலம் – தொடர்ச்சிஆண்டவர் இயேசுவின் கல்வாரிப் பயணத்தில் அவர...
10/03/2026

தவக்கால சிந்தனைகள் 16 :

இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட நான்காம் ஸ்தலம் – தொடர்ச்சி

ஆண்டவர் இயேசுவின் கல்வாரிப் பயணத்தில் அவர் தன் தாயை சந்தித்தார் என்று ஒரே வரியில் சொல்லிவிட முடியாது..

ஆண்டவர் இயேசுவின் அந்த பரிதாப நிலையை ஒரு வார்த்தையில் சொல்லிவிடவும் முடியாது.. முகம், சிரசு, திருமேணி அனைத்திலும் காயங்கள்; இரத்தக் கோடுகள், இரத்தம் வடிந்து காய்ந்து இருக்கிறது. சில இடங்களில் இரத்தம் இன்னும் வடிந்து கொண்டிருக்கிறது. தலையில் முள்முடி, கழுத்தில் ஒரு போர்டு, தோலில் சிலுவை. அவர் முகம் பொழிவிழந்து காணப்படுகிறது. தலைமுடி இரத்தத்தில் சிக்கிக் சிக்கலாகி இருந்தது. இந்த அலங்கோல நிலையை நம் திருத்தாயார் பார்த்தால் அவர் இதயம் அதை எப்படித்தாங்கும்?

தான் பாலூட்டி, சீராட்டி பொத்தி, பொத்தி வளர்த்த பிள்ளை, எப்போதும் சிரித்த முகம், மகிழ்ச்சி பொங்கும் விழிகள், தெய்வீகப் புண்ணகை ததும்பும் இதழ்கள், கருணையும், அருளும் சொரிந்த கண்கள், தெய்வீகம், தெய்வீகம், தெய்வம் அல்லவா அவர்; கடவுள் அல்லவா அவர்; எப்படி இருந்திருப்பார்?; இப்போது எப்படி இருக்கிறார்.

கரைபுரண்டு ஓடி வந்த கண்ணீர்ப் பெருங்கடலை இந்த மனுக்குலத்தின் மீது நான் கொண்ட அன்பால் தடுப்பணை போட்டு நிறுத்திவிட்டேன். அந்த சூழ்நிலையிலும் என் மகன் எனக்கு ஆறுதல் அளிக்க முயல்கிறார். மிகவும் சிரமப்பட்டு புண்ணகை சிந்துகிறார். அவர் புண்ணகை எனக்கு எவ்வளவு வேதனை அளித்தென்றால் என்னால் புண்ணகைக்க முடியவில்லை. ஆறுதலும், திடமும் மட்டுமே கொடுக்க முடிகிறது. பிதாவின் மீட்புத் திட்டத்தில் இது எங்கள் பணி; அவரின் பாடுகளில் என் பங்களிப்பு; நாங்கள் ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த அன்பு வைத்திருந்தாலும் அந்த சூழ்நிலையில் நாங்கள் இருவருமே எங்களைப் பற்றி கவலைப்படாமல் மனுக்குலமான உங்களைப் பற்றியே கவலைப்பட்டோம். நாங்கள் எதற்காக இந்த கொடூரமான துன்பக்கலத்தை சேர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். மீட்பு.. மீட்பு… மீட்பு மட்டும்தான். உங்களை நரகத்திலிருந்தும், பாவத்திலிருந்தும் மீட்கத்தான். இப்போது என் மகன் பேசுகிறார்..

இயேசு : “ என் சகோதரனே, சகோதரியே, எங்களின் இந்த பாடுகளின் அகோர; அலங்கோல நிலையைப் பார்க்கிறீர்களா? இந்த உலகத்தில் எந்த தாய்க்கும் வரக்கூடாத நிலையில் என் தாய் நிற்கிறார்கள், நான் நிற்கிறேன். கடவுளைப் பெற்றெடுத்த பாக்கியவதி; பரலோக பூலோக இராக்கினி, ராணி, அவர்கள் அரசி என்பது உனக்குத் தெரியுமா? கபரியேல் தூதர் மங்கள வார்த்தை சொல்லியது முதல் இதோ இங்கே நிற்பது முதல் அவர்கள் அரசிக்குரிய மணிமகுடத்தையும், இராஜ வாழ்க்கையையா வாழ்ந்தார்கள்?

ஏழ்மை, தரித்திரம், புறக்கணிப்பு, இடம் கிடைக்காமை, எகிப்தை நோக்கி ஓடிப்போதல், அங்கு அகதி வாழ்க்கை, வறுமை, மழை, குளிர், பாடுகள், அதன் பின்பு ஏழ்மை, தரித்திர வாழ்க்கை கல்வாரியான இங்கேயும் சொல்லில் அடங்கா பாடுகள்; இப்போது என் அருகே எனக்கு ஆறுதல் சொல்லி நிற்கிறார்கள்?

இதெல்லாம் யாருக்காக? உனக்காக உங்களுக்காகத்தானே, இப்போதாவது சிந்தித்து மனம் திரும்ப மாட்டீர்களா? அவர்களின் இந்த நிலையைப் பார்த்தாவது மனம் திரும்ப மாட்டீர்களா?

எங்கள் பெயரில் தயாவாயிரும் சுவாமி, தயாவாயிரும்…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

தவக்கால சிந்தனைகள் 15 : (முதல் சனி சிந்தனையாக)இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட  நான்காம் ஸ்தலம்...இயேசு நாதர் சுவாமி தம் பரிச...
07/03/2026

தவக்கால சிந்தனைகள் 15 : (முதல் சனி சிந்தனையாக)

இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட நான்காம் ஸ்தலம்...

இயேசு நாதர் சுவாமி தம் பரிசுத்த தாயாரை சந்திக்கிறார்...

எங்கேயெல்லாம் யாருக்கெல்லாம் சக்தி தேவைப்படுகிறதோ குறிப்பாக ஆன்மீக சக்தி தேவைப்படுகிறதோ அங்கே நம் தாயார் ஆஜராகிவிடுவார்கள், அழைத்தால் மற்றும் நினைத்தால்..

யாருக்கெல்லாம் தெரியும் நம் தாயார் ஆண்டவர் இயேசுவின் பாடுகளில் எப்போதிருந்து பங்கேற்கிறார்கள்? எப்படி பங்கேற்றார்கள் என்று. ஆண்டவர் இயேசுவின் பாடுகளில் பங்கேற்க துவங்கியது ஆண்டவர் இயேசுவை நாற்பதாம் நாளில் இருந்து (கருத்தாங்கியது முதலே என்பதும் சரி) என்றைக்கு சிமியோன் “ உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுறுவும் “ என்று தீர்க்க தரிசனம் சொன்னாரோ, அப்போதிலிருந்தே பங்கேற்றார்கள்.

ஆண்டவர் இயேசுவின் துன்பக்கலத்தில் எப்போதிருந்து பங்கேற்றார்கள்?

ஆண்டவர் பிறந்த நாள் முதல். ஏனென்றால் அன்று முதலில் மாதா அதிகமாக துன்புற்றார்கள் என்று வாசிக்கிறோம். ஏனெனில் அன்று சத்திரத்தில் இடம் கிடைக்கவில்லை. ஒதுக்கப்பட்ட மாட்டுத் தொழுவமே கிடைத்தது. அன்று எவ்வளவு துன்பத்திற்கு ஆளானார்கள். அன்று ஆண்டவர் இயேசுவுக்கு கிடைத்தது தீவனத்தொட்டி; இன்று சிலுவைத் தொட்டில்.

மாதா ஆண்டவர் இயேசுவுக்காக தன்னை தயாரிக்க ஆரம்பித்தது எப்போதிருந்து?

மாதாவும் மற்ற யூதப்பெண்களைப் போல மீட்பர் தன் வயிற்றில் கூட பிறக்கக் கூடும் என்று சிறுவயது முதல் அல்லது இளமை வயது முதல் தன்னை தயாரித்து வந்தார்கள். ஆகையினால்தான் கபரியேல் தூதரின் வாழ்த்தைக் கேட்டு இவ்வாழ்த்து எத்தகையதோ என்று கலங்கினார்கள் (லூக் 1 : 29). ஏன் என்றால் தன்னால் அது இயலுமா? என்றும் தாழ்ச்சியின் நிமித்தமும் கலங்கியிருப்பார்கள்..

மாதா மீட்புத் திட்டத்தை எப்போதிருந்து தியானித்தார்கள்?

மீட்புத்திட்டம் என்றாலே ஆண்டவர் இயேசுவின் திருப்பாடுகள்தான். பைபிளில் இருக்கிறதா? இருக்கிறது.

“ மரியாளோ (பழைய பதிப்பில் மரியம்மாள்) இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தன் உள்ளத்தில் இருத்தி சிந்தித்து வந்தாள்” (லூக் 1 : 19).

ஆம் அன்று மாதா சிந்தித்தது இப்போது அரங்கேறுகிறது. இப்போது நான்காம் ஸ்தலத்திற்கு வருவோம்..

ஆண்டவர் இயேசு சிறுவயதில் கல்தட்டி விழும்போது “ அம்மா” என்று அழைத்தார்; உடனே மகனே, என்று உள்ளம் துடிக்க ஓடி வந்து விழுந்த தன் மகனை தூக்கி எடுத்து அணைத்து முத்தமிட்டார். இப்போதும் விழுந்த மகன் “ அம்மா” என்று கத்துகிறார். அடுத்த நிமிடமே “ மகனே “ என்று மகன் முன்னால் வந்து விட்டார். ஆனால் இப்போது இந்த அன்புத்தாயை தன் மகனை அரவணைக்க அங்கு இருக்கும் கூட்டம் அனுமதிக்க வில்லை. துயரத்தால் இந்த தாயின் உள்ளம் நெருப்பில் வெந்து துடித்தாலும், கண்களில் உள்ள கண்ணீரை அடக்கி கணிவோடு தன் மகனைப் பார்க்கிறார். அந்த ஒரு பார்வையில் மாதா என்னவெல்லாம் கொடுத்தார்கள். “ அன்பு, கனிவு, துணிவு, உறுதி, திடம், இரக்கம், உடனிருப்பு ” என்று தன் மகனுக்குத் தேவையான அத்தனையும் தன் ஒரே பார்வையில் கொடுத்தார்கள். அந்த ஒரு பார்வை என்ன சொல்லியது தெரியுமா?

“ மகனே, நான் உன்னோடு இருக்கிறேன், நம் பிதா உன்னோடு இருக்கிறார், உறுதி கொள், துணிந்து நில், நிமிர்ந்து நில், தைரியமாக உன் நடையை கல்வாரியை நோக்கி வீர நடை போடு. உன் துன்பங்களை பகிர நான் உன்னோடு இருக்கிறேன். உனக்குத் துணையாக வருவேன். நாம் தொடர்ந்து கல்வாரியை நோக்கி பயணிப்போம்”

எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்..

இயேசுவுக்கே புகழ் !
மரியாயே வாழ்க !

தவக்கால சிந்தனைகள் 13 :இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட இரண்டாம் ஸ்தலம் ...இயேசு சுவாமியின் தோளில் சிலுவை சுமத்தப்படுகிறது..க...
05/03/2026

தவக்கால சிந்தனைகள் 13 :

இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட இரண்டாம் ஸ்தலம் ...

இயேசு சுவாமியின் தோளில் சிலுவை சுமத்தப்படுகிறது..

கடவுளை விசாரித்த பாவிகளான நாம் அவருக்கு மரணத்தீர்வையிட்டோம்; அவர் தோளில் சிலுவையை சுமத்தினோம்.

அடிபட்டு, இரத்தம் சிந்தி சோர்ந்திருந்த அவர் மேல் கூடுதல் சுமையாக சிலுவை சுமர்த்தப்படுகிறது. பெரிய வியாழன் அன்று இரகசிய உபாதை என்ற பெயரில் கொடுமையான பதினைந்து உபாதைகள். அதன் பின் விசாரணை என்ற பெயரில் அங்குமிங்கும் அழைக்கலிப்பு. அடிகள்; இழுத்துச் செல்லப்படுதல். அவரைக் உட்காரக்கூட விடாத நிலை. பலி கொடுக்க இழுத்துச் செல்லப்படும் ஆட்டுக்கிடாய்களுக்குக் கூட பலி செலுத்தப்படும் நேரம் வரை இராஜ உபசரிப்பு, மரியாதை. ஆனால் நம் மாசற்ற செம்மறி ஆட்டுக்குட்டியான இயேசு சுவாமிக்கு அவமானம், அடிமேல் அடி, இழுத்துச் செல்லப்படுதல், எள்ளி நகையாடுதல் என்று அவமானமும், அவசங்கைகளும், அடி உதைகளும், வரிசையாகக் கிடைத்துக்கொண்டே இருக்கிறது.

ஆனால் நம் சேசு சுவாமி அந்த நேரத்தில் கொடுக்கப்பட்ட சிலுவையைக் கூட நேசத்தோடு பார்க்கிறார்; அதைப் பாசமாக அரவணைக்கிறார்; அதை முத்தமிடுகிறார். உன்னில் அறையப்படத்தானே பிறந்தேன்; உன்னில் மரிக்கத்தானே பிறந்தான். வா, என் நண்பனே என்று சுமையாக வந்த சுமையை சுகமாக, ஒரு வரமாக எண்ணி தன் தோலில் பெற்றுக் கொள்கிறார்.

இப்போது ஆண்டவர் பேசுகிறார்,

“ என் சகோதரனே, என் சகோதரியே என்னைப் பின் செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்து; நாள்தோறும் தன் சிலுவையை சுமந்து கொண்டு என்னைப் பின் தொடரட்டும் என்றேன்”. நான் செய்யாத ஒன்றை நான் எப்போதும் உங்களைச் செய்ய சொல்லவே இல்லை. அதைப் போல நான் உங்களைச் செய்யச் சொல்லிய எதையும் நீங்கள் செய்வதும் இல்லை. நான் செய்யாத, உங்களைச் செய்யச் சொல்லாத பாவத்தை மட்டும் மீண்டும், மீண்டும் செய்கிறீர்கள்.

இப்போதும் நான் அனுபவிக்கும் துன்பங்களைப் பார்த்து உச்சுக்கொட்டாதீர்கள்; அது ஏன் என்று சிந்தித்துப் பாருங்கள். இவை அனைத்தும் உங்களை மீட்கவும், நீங்கள் மனம் மாறவுமே செய்தேன். அன்று என்னை கஷ்ட்டப்படுத்தியதும், இப்போது என்னைக் கஷ்ட்டப்படுத்துவதும் நீங்கள்தான். மனம் திரும்புங்கள்; பாவம் செய்வதை விட்டு விடுங்கள். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாளை உங்களைத் தீர்ப்பிடப் போகிற கடவுள் நான்தான் என்று,

எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி தயவாயிரும்..

இயேசுவுக்கே புகழ் !
மரியாயே வாழ்க!

தவக்கால சிந்தனைகள் 12 :இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட முதலாம் ஸ்தலம்...இயேசு நாதர் சுவாமியை சாவுக்கு தீர்வையிடுகிறார்கள்......
04/03/2026

தவக்கால சிந்தனைகள் 12 :

இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட முதலாம் ஸ்தலம்...

இயேசு நாதர் சுவாமியை சாவுக்கு தீர்வையிடுகிறார்கள்...

நீதிபதி விசாரிக்கப்படுகிறார். இவர் ஹைகோர்ட் நீதிபதியோ அல்ல; சுப்ரீம் கோர்ட் நீதிபதியோ அல்ல. நீதிபதிகளுக்கெல்லாம் நீதிபதி. பரலோக பூலோக, மூலோக கோர்ட்டின் நீதிபதி. இவர் தீர்ப்பு மிக மிக சரியானதாக இருக்கும். இவர் தீர்ப்பே இறுதியானது; இவர் தீர்ப்பை எதிர்த்து யாரும், எங்கேயும் அப்பீல் செய்ய முடியாது.

நீதி அரசர்; நீதியின் அரசர்; நீதிக்கே அரசர்.

மூவுல அரசர் ஒரு கைதியாக அவரால் படைக்கப்பட்ட மனிதன் முன் குற்றவாளியாக இருக்கிறார். கைது செய்யப்பட்டு நிற்கிறார்; கரங்கள் கட்டப்பட்டு நிற்கிறார். குற்றவாளி என்கிறார்கள், பாவி என்கிறார்கள், கடவுளைப் பழித்தான் என்கிறார்கள்.

“ இவன் சாவுக்குரியவன்; இவனை சிலுவையில் அறையும்; சிலுவையில் அறையும் “ என்று என்னன்னவோ சொல்கிறார்கள்.

விசாரிப்பவர்களையும், அடிப்பவர்களையும் அமைதியாக பார்க்கிறார், அமைதியாகப் பேசுகிறார்; உண்மையை மட்டும் பேசுகிறார்.

உண்மையைப் பேசியவர், நல்லதை மட்டும் செய்தவர், நன்மைக்காக, கடவுளுக்காக குரல் கொடுத்தவர், தீமையை எதிர்த்தவர், தீயவர்களின் முகத்திரையைக் கிழித்தவர்,

அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்தவர், நோய்களை குணமாக்கியவர், இறந்தவர்களை உயிர்ப்பித்தவர், வயிரார சாப்பாடு போட்டவர்.

இப்போது நிராயுதபாணியாக, தன்னந்தனியாக, யாருமே தனக்கென குரல் கொடுக்காத சூழ்நிலையிலும், அமைதியாக நிற்கிறார். ஆனால் உறுதியாக நிற்கிறார். ஏனென்றால் நம் ஆண்டவரே சொன்னதுபோல் இருள் ஆட்சி புரியும் நேரத்தில் சாந்தத்தோடு நிற்கிறார்.

இங்கே நாம் உச்சுக் கொட்டவேண்டிய அவசியம் இல்லை. தியானிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

நாளை அவர் நீதி இருக்கையில் இருப்பார்; நாம் குற்றவாளிகூண்டில் இருப்போம் அவர் கேட்பார்,

"எனது சாயலாகவும், பாவனையாகவும், இயல்பாகவும் உன்னை படைத்தேன். பின் ஏன் பாவம் செய்தாய்?
தெரியாமல் செய்துவிட்டாய்; ஏன் பாவத்திற்காக மனம் வருந்தவில்லை? ஏன் மனம் திருந்தவில்லை. உனக்காக நான் ஏற்படுத்திய திருவருட்சாதமான பாவசங்கீர்த்தனத்தை ஏன் பயன்படுத்தவில்லை?
பாவசங்கீர்த்தனம் ஏன் உன் பாவங்களை மனவுறுத்தலோடும், தாழ்ச்சியோடும் சொல்லி முழுமையான சரியான பாவசங்கீர்த்தனம் ஏன் நீ செய்யவில்லை?
எத்தனை முறை பாவசங்கீர்த்தனம் செய்தும், ஏன் திரும்ப, திரும்ப மீண்டும் அதே பாவங்களைச் செய்தாய்? செய்த பாவத்தை மீண்டும் செய்யக் கூடாது என்று ஏன் நீ முடிவெடுக்கவில்லை? அதற்காக எந்த முயற்சியும் நீ ஏன் எடுக்கவில்லை?

நீ நரகம் போய்விடக் கூடாது என்பதற்காகத்தானே நான் மனிதனாகப் பிறந்தேன் உன்னை பாவத்திலிருந்தும், நரகத்திலிருந்தும் மீட்கத்தானே நான் பிறந்தேன். நான் ஏன் இந்த உலகிற்கு வந்தேன் என்று உனக்கு தெரியும்தானே? என் பிதாவிடம் நான் மகிழ்ச்சியாக இருக்க எனக்குத் தெரியாதா? உன் பாவத்திற்கேற்ப மோட்சம், நரகம் என்று தீர்ப்பிட்டுவிட்டு உன்னை நரகத்தில் வீசியெறிய எனக்குத் தெரியாதா?

உன்னை அடுத்த ஸ்தலத்தில் சந்திக்கிறேன்"

எங்கள் பெயரில் தயவாயிரும் சுவாமி; தயவாயிரும்..

இயேசுவுக்கே புகழ் !
மரியாயே வாழ்க !

ஜெபம்/ஜெபமாலை அவசர தேவை :அமெரிக்க- இஸ்ரேல் X ஈரான் போர் (வளைகுடா போர்) நிறுத்தப்பட ஜெபமாலை ஜெபிப்போம். நாம் பங்கேற்கும் ...
03/03/2026

ஜெபம்/ஜெபமாலை அவசர தேவை :

அமெரிக்க- இஸ்ரேல் X ஈரான் போர் (வளைகுடா போர்) நிறுத்தப்பட ஜெபமாலை ஜெபிப்போம். நாம் பங்கேற்கும் திருப்பலிகளில் இந்த கருத்துக்காக ஒப்புக் கொடுத்து ஜெபிப்போம்..

நாடுகள் தங்கள் சுய நலத்திற்காக, அடுத்த நாட்டு இயற்கை வளங்களைத் திருட, தங்கள் பகையைத் தீர்த்துக் கொள்ள சண்டை இடுகின்றன.

இந்த சண்டையால் அப்பாவி மக்கள், குழந்தைகள் அநியாயமாக கொல்லப்படுகின்றன. ஈரானில் 80 -க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளது நெஞ்சம் பதறும் செய்தி. மக்களின் உயிர்களைப் பற்றி எந்த நாடுகளும் கவலைப்படுவதில்லை.

முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது தேவ மாதா பாத்திமாவில் காட்சி கொடுத்து உலக சமாதானத்திற்காகவும், பாவிகள் மனம் திரும்பவும் யுத்தம் முடிவடையவும் ஜெபமாலை ஜெபிக்க சொன்னார்கள். தவத்தையும், பரிகாரத்தையும் சேர்த்து கேட்டார்கள். ஆம் மாதா கேட்டது ஜெபம், தவம், பரிகாரம்..

நம்மால் முடிந்த மட்டும் இவைகளைச் செய்வோம். நாம் செய்யும் யாவற்றையும் பரிகாரமாக மாற்றுவோம்..

குடும்ப ஜெபமாலையில், குழு ஜெபமாலையில், பொது ஜெபமாலையில் இந்த கருத்துகளுக்காக அதிகமாக ஜெபிப்போம்.

ஜெபமாலை அவசரம்...

இன்று நாளை நாமாக இருக்கலாம்..

இயேசுவுக்கே புகழ் !
மரியாயே வாழ்க!

Address

Nagapattinam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joseph Vital Prasath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Joseph Vital Prasath:

Share