Joseph Vital Prasath

Joseph Vital Prasath I love my Catholic Church

செப்டம்பர் 02 | நவநாள் 5ம்  நாள் ..புனித வேளாங்கண்ணி பேராலயத்தின் எழில்மிகு பலிபீட அலங்காரம். ஆரோக்கிய அன்னையின் அருள் ஆ...
02/09/2026

செப்டம்பர் 02 | நவநாள் 5ம் நாள் ..

புனித வேளாங்கண்ணி பேராலயத்தின் எழில்மிகு பலிபீட அலங்காரம்.

ஆரோக்கிய அன்னையின் அருள் ஆசி இன்றும் என்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கிடைப்பதாக..

September 02 | Novena Day 5.

Behold the stunningly decorated altar at the Vailankanni Shrine Basilica.

May the blessings of Our Lady of Health be with you and your family today.

அன்பு நண்பர்களே பிரிவினை சகோதரர்கள் நமது பாரம்பரிய வழிபாடுகளை குறிப்பாக நமது ஆராதனைகளிலும் மற்ற வழிபாடு முறைகளிலும் நமது...
29/08/2026

அன்பு நண்பர்களே பிரிவினை சகோதரர்கள் நமது பாரம்பரிய வழிபாடுகளை குறிப்பாக நமது ஆராதனைகளிலும் மற்ற வழிபாடு முறைகளிலும் நமது ஆலய நேர்ச்சைகளையும் பிறமத வழிபாடுகளை செய்கிறீர்கள் என்று தப்பறையான போதனைகளை நம்மீது வீசுகிறார்கள்

யூதத்தின் தொடர்ச்சியே கத்தோலிக்கம்

பிரிவினை மற்றும் பெந்தகோஸ்து அமைப்பினர் சொல்வது இவைகளைத்தான்
💥💥💥💥💥💥👇👇👇👇👇👇👇

1, ஆலயங்களில் கொடி ஏற்றுதல் திரு விழாக்கள்

2,ஆலயங்களில்
மெழுகுவர்த்தி அல்லது விளக்கு ஏற்றுதல்

3, சாம்பிராணி , தூபம் காட்டுதல்

4, பூக்களால் ஆலங்காரம.

5, சந்தனம் மற்றும் நறுமணம் பொருட்களை ஆலயங்களில் பயன் படுத்துவது

6,ஆலயங்களில் தாழ்ந்து பணிந்து முட்டிபோட்டு நடந்து இறைவேண்டல் செய்வது .

7,ஆலயங்களில் மொட்டையடித்தல்

8,பாதயாத்திரை

9,தேர் , சப்பரபவனி

10,செபமாலை

11,உப்பு

👆👆👆👆👆👆👆

💥மேலே உள்ள வழிபாடு மற்றும் திருநிகழ்வுகள் பிறமதம் சார்ந்தவைகளா இல்லை அதற்கான விவிலிய சான்றுகளும் பாரம்பரிய நிகழ்வுகளும் 💥

1,,கொடியேற்றுதல் திருவிழா 🏳️
🏳️

திருப்பாடல்கள் - திபா 20 5 உமது வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போமாக! நம் கடவுளின் பெயரால் வெற்றிக்கொடி நாட்டுவோமாக! உம் விண்ணப்பங்களையெல்லாம் ஆண்டவர் நிறைவேற்றுவாராக!

இணைச் சட்டம் - இச 16 15 உன் ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு ஏழு நாள்கள் விழாக் கொண்டாடு. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நிலத்தின் விளைச்சல்களுக்கும் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார். அப்பொழுது நீ நிறைவாக மகிழ்ச்சியுறுவாய்

2, மெழுகுவர்த்தி அல்லது விளக்கு ஏற்றுதல்
விடுதலைப் பயணம் - விப 25 31 பசும் பொன்னால் ஒரு விளக்குத் தண்டு செய்வாய். அடிப்பு வேலையுடன் விளக்குத் தண்டை அமைப்பாய். அதன் அடித்தண்டு, கிளைகள், கிண்ணங்கள், குமிழ்கள், மலர்கள் ஆகியவை ஒன்றிணைந்ததாக விளங்கட்டும்.

விடுதலைப் பயணம் - விப 25 37 அதற்காக ஏழு அகல்கள் செய்வாய்; முன் பக்கமாக ஒளிவீசும் முறையில் அவற்றை ஏற்றிவைப்பாய்.

லூக்கா - லூக் 11 33 “எவரும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ மரக்காலுக்குள்ளோ வைப்பதில்லை; மாறாக அறையின் உள்ளே வருவோர்க்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர்.

ஆலயங்களில் ஏற்றப்படும் விளக்கு அந்நிய கலாச்சாரமா ????
💥💥💥💥💥💥

3, சாம்பிராணி தூபம் காட்டுதல்

மலாக்கி - மலா 1 11 கதிரவன் தோன்றும் திசை தொடங்கி மறையும் திசைவரை வேற்றினத்தாரிடையே என் பெயர் புகழ்மிக்கது. எவ்விடத்திலும் என் பெயருக்குத் தூபமும் தூய காணிக்கையும் செலுத்துப்படுகின்றன. ஏனெனில் வேற்றினத்தாரிடையே என் பெயர் புகழ் மிக்கதே” என்கிறார்,
படைகளின் ஆண்டவர்.

மத்தேயு : 2 : 11 - அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.

திருவெளிப்பாடு - திவெ 8 3 மற்றொரு வானதூதர் பொன் தூபக் கிண்ணம் ஏந்தியவராய்ப் பலிபீடத்தின் அருகில் வந்து நின்றார். அரியணைமுன் இருந்த பொன் பலிபீடத்தின்மீது இறைமக்கள் அனைவரும் செய்த வேண்டுதல்களோடு படைக்குமாறு அவருக்கு மிகுதியான சாம்பிராணி வழங்கப்பட்டது.

4 அச்சாம்பிராணிப் புகை இறைமக்களின் வேண்டுதல்களோடு சேர்ந்து வானதூதரின் கையிலிருந்து கடவுள் திருமுன் எழும்பிச் சென்றது.

கடவுளை ஆராதனை செய்ய பயன்படுத்த தூபமும் சாம்பிராணியும் பயன்படுத்துவது மரபு

💥💥💥💥💥💥💥

4 ,இறைவன் விரும்பும் பூக்களாலான அலங்காரம் .
🌷💥💥💥💥💥💥💥💥🌷💥💥💥💥🌷

விடுதலைப் பயணம் - விப 25 33 ஒரு கிளையில் வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் 🌷மலருடனும் சேர்ந்து அமையும். மறுகிளையிலும் வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் 🌷மலருடனும் அமையும். இவ்வாறே விளக்குத்தண்டிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளும் இருக்கட்டும்.

எண்ணிக்கை - எண் 17 8 மறுநாள் மோசே உடன்படிக்கைக் கூடாரத்தினுள் சென்றார்; லேவிகுலத்துக்காக இருந்த ஆரோனின் கோல் துளிர் விட்டிருந்தது; அது துளிர்த்துப் 🌷பூத்து வாதுமைப் பழங்களைத் தாங்கியிருந்தது.

5, இறைவன் விரும்பும் சந்தனம் மற்றும் குங்குமம்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

திருப்பாடல்கள் - திபா 45 8 நறுமணத் துகள், அகிலொடு இலவங்கத்தின் மணங்கமழும் உம் ஆடையெலாம்; தந்தம் இழைத்த மாளிகைதனிலே யாழிசை உம்மை மகிழ்விக்கும்.

6,ஆலயங்களில் இறைபிரசன்னம் முன்பாகதாழ்ந்து பணிந்து முட்டிபோட்டு நடந்து இறைவேண்டல் செய்வது .
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

யோசுவா - யோசு 7 6 யோசுவா தம் ஆடைகளைக் கிழித்துக்கொள்ள, அவரும் அவருடன் இஸ்ரயேலின் முதியோரும் ஆண்டவரின் பேழைக்குமுன் மாலைவரை தரையில் முகம்குப்புற விழுந்து கிடந்தனர். தம் தலைமீது புழுதியைப் போட்டுக் கொண்டனர்.

திருப்பாடல்கள் - திபா 132 7 “அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்! வாருங்கள்; அவரது திருவடிதாங்கி முன் வீழ்ந்து பணிவோம்!” என்றோம்.

மத்தேயு : 2 : 11 - அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.

7 ,ஆலயங்களில் மொட்டையடிப்பது

(இது கத்தோலிக்க திருச்சபை கோட்பாடோ ,கொள்கையோ அல்ல..ஆனால் இது அந்தந்த இடத்து கலாச்சாரத்தோடும் சேர்ந்த பக்தி முயற்சியே..உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கமக்கள் மொட்டை அடிப்பதுமில்லை, கட்டாயமும் இல்லை..அதேவேளை பைபிளில் உள்ள சம்பவமே)

எண்ணிக்கை - எண் 6 18 நாசீர் புனிதப்படுத்தப்பட்ட தன் தலையைச் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் மழித்து, புனிதப்படுத்தப்பட்ட தன் தலைமுடியை எடுத்து நல்லுறவுப் பலியின் அடியில் இருக்கும் நெருப்பில் போடுவான்.

திருத்தூதர் பணிகள் - திப 18 18 பவுல் அந்தியோக்கியா திரும்புதல்

பவுல் பல நாள்கள் கொரிந்துவிலுள்ள சகோதரர் சகோதரிகளிடம் தங்கியிருந்தார். அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டுத் தம் நேர்த்திக் கடனை நிறைவேற்றக் கெங்கிரேயா நகரில் முடிவெட்டிக்கொண்டு, அக்கில்லா பிரிஸ்கில்லா ஆகியோருடன் சிரியாவுக்குக் கப்பலேறினார்

பவுல் நேர்ச்சை மொட்டை அடித்தது அந்நிய கலாச்சாரமா ????
💥💥💥💥💥💥💥

8,பாதயாத்திரை

லூக்கா - லூக் 2 41 ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்;

திரு பாடல்கள் தியாநித்து இறைவனை மகிமை படுத்தி நடந்து செல்வார்கள்

அதாவது நாசரேத்துக்கும் ஜெருசலேம் இடைப்பட்ட தூரம் 90 மைல்கள் 147 கிலோமீட்டர் தூரம்
பெரும்பாலும் கால்நடையாகத்தான் பயணம் இருக்கும்

காரில் ஆலயம் சென்றால் ரத யாத்திரை
💥💥💥💥💥💥

9,தேர் அல்லது சப்பரம்

யோசுவா - யோசு 3 15 உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானை அடைந்தனர். அவர்கள் காலடிகள் யோர்தான் நீரின் விளிம்பில் நனைந்தவுடன், மேற்பகுதியிலிருந்து ஓடிவந்த யோர்தான் நீர் வெகுதொலையில் நின்றது. அறுவடை நாள்களில் இந்நதி கரைபுரண்டு ஓடும்.

2 சாமுவேல் - 2 சாமு 6 15 தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத்தோடும் எக்காள முழக்கத்தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள்.

உடன்படிக்கை பேழையின் மாதிரிகள்தான் சப்பரம்
💥💥💥💥💥💥💥

10,செபமாலை

எண்ணிக்கை - எண் 15 38 இஸ்ரயேல் மக்களிடம் நீ பேசு; அவர்கள் தலைமுறைதோறும் தங்கள் உடைகளின் முனைகளில் குஞ்சங்கள் செய்து ஒவ்வொரு குஞ்சத்திலும் ஒரு நீல நாடாவைக் கட்டச் செய்;

எண்ணிக்கை - எண் 15 39 நீங்கள் ஒழுக்கம் கெட்டு நடப்பதற்கு ஏதுவாய் உங்கள் இதயங்களும் உங்கள் கண்களும் விரும்புவதைப் பின்பற்றாமல் நீங்கள் அவற்றைப் பார்த்து ஆண்டவர் கட்டளைகள் அனைத்தையும் நீங்கள் நினைவு கூர்ந்து அவற்றைச் செய்திடவே இக்குஞ்சம்.

ஆடைகளின் ஓரங்களில் இஸ்ராயல் மக்கள் ஏற்படுத்திய முடிச்சுகள் மறு உருபம் அடைந்து செபமாலைகளாக மாறியது

அன்னையோடிணைந்து ஆண்டவர் இயேசுவின் பிறப்பு இறப்பு விண்ணேற்பு வாழ்க்கைமுறைகளை தியானிப்பது செபமாலை

செபமாலை வாக்கியங்கள் அனைத்தும் விவிலிய வார்த்தைகள்💥💥💥💥💥

11,உப்பு

எண்ணிக்கை - எண் 18 19 இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் புனிதப்படையல்கள் அனைத்தையும் நான் உனக்கும் உன்னோடிருக்கும் உன் புதல்வர் புதல்வியருக்கும் என்றுமுள நியமமாகத் தருகிறேன்; இது உனக்கும் உன்னோடிருக்கும் உன்வழி மரபுக்கும் ஆண்டவர் திருமுன் என்றுமுள “உப்பு உடன்படிக்கை” ஆகும்.

💥💥💥💥💥💥💥💥

மத்தேயு - மத் 5 17 “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.

2 தெசலோனிக்கர் - 2 தெச 2 15 ஆகவே அன்பர்களே! எங்கள் வாய்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக் கொண்டு அவற்றில் நிலையாயிருங்கள்.

கத்தோலிக்க திருச்சபை பாரம்பரிய புனித நிகழ்வுகள் அனைத்தும் விவிலிய உண்மைகளே 💥

கத்தோலிக்கர்கள் பாவிகளா பாவம் செய்ய வேளாங்கண்ணி அல்லது வேறு ஆலயங்கள் செல்கிறார்களா??

👉கத்தோலிக்க இறை மக்களை பாவிகள் என்று குறை கூறும் பிரிவினை வாதிகளே உங்களை பார்த்து ஒரு கேள்வி நீங்கள் இராட்சிப்பை பெற்றதற்கு என்ன proof??? கடவுள் எதாவது certificate தந்தாரா? நேரில் வந்து உன்னிடம் சொன்னாரா .?

அன்பு நண்பர்களே நல்ல பாவசங்கீர்ததனம செய்து புனித திருப்பலியில் பங்கு பெற்று திவ்ய நற்கருணை உட்கொள்ளுங்கள்
நமது உடலை தூய ஆவியானவர் தங்கும் ஆலயமாக மாற்றுவோம்

🌸அற்புதங்களை #அள்ளி செல்லுங்கள் கிறிஸ்தவ வாழ்வு என்பது போராட்டமான வாழ்வு போராடி வெற்றி கொள்வோம் #ஜெபமாலை செய்வோம்

குறிப்பாக பிரிவினைவாதிகள் கடவுள் இயேசுவை ஏற்க மறுக்கும் யோகோவா விட்னெஸ் பிரிவினைவாதிகளிடம் சற்று விலகியே இருங்கள் ஏமாந்த கத்தோலிக்க விசுவாசிகளை தனது சுய லாபத்திற்காக மூளை சலவை செய்து குளப்பி ஆதாயம் தேட தங்கள் தனது அமைப்பிற்கு இழுத்து செல்ல வருவார்கள்

🌷GLORY TO JESUS 🙏 AVE MARIA🌷
👉 Follow our page for more Catholic teachings, lives of the saints, and faith-deepening reflections.

03/07/2026

தலைவெள்ளி மற்றும் முதல் சனி பக்தி முயற்சி : இன்று தலை வெள்ளி வெள்ளி நாளை முதல் சனி)

“ நீங்கள் தவஞ்செய்யாவிடில் எல்லோரும்.. எல்லோரும் கெட்டுப்போவீர்கள் “ என்கிறார் நம் ஆண்டவர்.. (லூக்.13:3)

இன்று ஒருசந்தி சுத்த போஜனம் அனுசரிப்போம். ஆண்டவர் இயேசு நம்மிடம் கேட்ட விசயங்களே முதல் வெள்ளி, முதல் சனி பக்தி முயற்சிகள். நம் இயேசு தெய்வத்தின் இருதயமும், மாதாவின் மாசில்லாத இருதயம் நாம் செய்யும், இந்த உலகத்தினர் செய்யும், கடவுள் நம்பிக்கையற்றவர் செய்யும் பாவ துரோகங்கள் மற்றும் நிந்தைகளால் மிகவும் நொந்துபோய் இருக்கின்றன. அவர்கள் இருதயங்களுக்கு நாம் தரும் ஆறுதலே இந்த தலைவெள்ளி, முதல் சனி பக்தி முயற்சிகள்.

“ நீயாவது எனக்கு ஆறுதல் தர மாட்டாயா “ என்று புனித மார்கரெட் மரியம்மாளிடம் நம் இயேசு தெய்வம் கேட்டார். அதே போல் பாத்திமா சிறுமி லூசியாவிடம் நம் தேவ மாதா, தன் குமாரன் இயேசுவின் குமாரனோடு அவர் பனிரெண்டு வயது தோற்றத்துடன் தோன்றி “ நீயாவது எங்களுக்கு ஆறுதல் தர மாட்டாயா “ என்று கேட்டார்கள்.

தலை வெள்ளி :

17- ஆம் நூற்றாண்டில் அதாவது 1675-ம் ஆண்டு திவ்ய நற்கருணைத் திருநாளுக்கு அடுத்த வார வெள்ளிக்கிழமையன்று தேவ நற்கருணைக்கு முன், ஜெபத்தில் ஆழ்ந்திருந்த அர்ச்.மார்கரீத் மரியம்மாளுக்கு நமதாண்டவர் தமது திருஇருதயத்தை திறந்து காட்டினார். அக்கினி சுவாலையின் மத்தியில் தோன்றிய அவ்விருதயத்தைச் சுற்றி முள்முடியும் அதன் மேல் சிலுவையும் காணப்பட்டன.

சேசு அவளிடம், “ இதோ மனுமக்களை அளவற்றவிதமாய் நேசிக்கும் இருதயத்தைப்பார்! தனக்கென ஒன்றும் வைக்காது தன்னையே வெறுமையாக்கிய இருதயம் தன் அன்பை வெளிப்படுத்த உயிரையே அர்ப்பணித்த இருதயம். அதற்கு கைமாறாக கிடைப்பது என்ன?/ பெரும்பாலும் நன்றிகெட்டதனமும் நிந்தை அவமானமும் தேவதுரோகமுமே.. எனக்கென தங்களை நேர்ந்து கொண்டவர்களே இவ்வாறு துன்பம் தருகின்றனர் என்பதே என் இருதயத்திற்கு மிகுதியான வேதனை தருகிறது. இந்த நன்றிகெட்டதனத்திற்கு நீயாவது பரீகாரம் செய்யமாட்டாயா?” என்று இரக்கத்தோடு கேட்டார்..

நம் அன்பு தெய்வத்திற்கு நம் பதில் என்ன?

முதல் வெள்ளி அன்று ஒருசந்தி, சுத்தபோஜனம், சில ஒறுத்தல் முயற்சிகள் தவிர நம் தெய்வத்தின் திருப்பாடுகளை அதிகமாக தியானிக்க வேண்டும். துக்க தேவரகசியம் ஜெபமாலையில் தியானிக்க வேண்டும். சிலுவைப்பாதை செய்ய வேண்டும். திருஇருதய ஜெபமாலை அல்லது இரக்கத்தின் ஜெபமாலை ஜெபித்தல் போன்ற பக்தி முயற்சிகள் செய்வோம். மேலும் அன்றைய தினம் நாம் சுமக்கும் அத்தனை சிலுவைகளையும் நம் தெய்வத்தின் திருஇருதய நிந்தை அவமானங்களுக்கு பரிகாரமாக ஒப்புக்கொடுப்போம்...

முதல் சனி : அன்று குறிப்பாக நமதன்னையின் வியாகுலங்களை தியானிக்க வேண்டும். சந்தோச, துக்க, ஒளி, மகிமை தேவ இரகசியங்களில் மாதா சம்பந்தபட்ட நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்றை மாதாவோடு தியானித்து ஜெபமாலை ஜெபித்து மாதாவோடு தங்கியிருத்தல் வேண்டும்..அன்று வியாகுல ஜெபமாலை ஜெபிப்போம்.

முக்கியமாக நம் இயேசு தெய்வத்தின் திருப்பாடுகளின் போது நம் அன்புத்தாய் உள்ளத்தால் அனுபவித்த பாடுகளையும், அவர்களின் பரிசுத்த வியாகுலங்களையும் தியானிப்போம்.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

மாதாவிடம் வெறும் காரிய பக்தி மட்டும்தானா?“ அருள் நிறைந்தவளே வாழ்க ! ஆண்டவர் உம்முடனே “லூக்காஸ் 1 : 28“ பெண் ஒருத்தி காணப...
01/07/2026

மாதாவிடம் வெறும் காரிய பக்தி மட்டும்தானா?

“ அருள் நிறைந்தவளே வாழ்க ! ஆண்டவர் உம்முடனே “

லூக்காஸ் 1 : 28

“ பெண் ஒருத்தி காணப்பட்டாள்; அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்; நிலவின் மீது நின்று கொண்டிருந்தாள்; தலையின் மீது பன்னிரு விண்மீன்களை முடியாக சூடியிருந்தாள் “

திருவெளி 12 : 1

அன்பான கத்தோலிக்க மக்களே ! மாதாவிடம் நாம் என்ன கேட்கிறோம்?

“ என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்; என் பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும்; நாங்கள் வீடு கட்ட வேண்டும்; கடன் பிரச்சனை தீர வேண்டும்; நோய் சுகமாக வேண்டும். என் மகனுக்கு வெளி நாட்டில் வேலை கிடைக்க வேண்டும்" இன்னும் எத்தனையோ நம்முடைய தேவைப்பட்டியல் இருக்கிறது. நம்மூர் ஆலயத்தில் இருக்கும் மாதாவிடம் மட்டுமல்ல பணம் செலவழித்து வேளாங்கன்னி, பூண்டி, வாடிப்பட்டி என்று ஓடிச்சென்று மாதாவிடம் அதையேதான் திரும்ப திரும்ப கேட்கிறோம்.

நம் மனதில் கை வைத்து பதில் சொல்வோம்; எத்தனை பேர் இதைக் கேட்டிருக்கிறோம்..

“ அம்மா, என் குடும்பத்திற்கு மோட்சத்தை தந்தருளும், என் மகனை/மகளை மோட்சப் பாதையில் நடத்தியருளும். நல்ல ஒழுக்கம் உள்ளவர்களாக நடத்தியருளும். அவர்களுக்கு நீர்தாமே தாயாக இருந்தருளும். உங்கள் மாசற்ற இருதயத்திற்கு என்னையும், என் குடும்பத்தையும் ஒப்புக்கொடுக்கிறோம். என் பிள்ளைகள் கடவுளுக்கு கீழ்படிந்து நடக்கச் செய்தருளும். அவர்களை உம் திருமகன் இயேசுவை நேசிக்கச் செய்தருளும். அவர்கள் நல்லவர்களாக வாழச்செய்தருளும் “ என்று கேட்கிறோமா?

எப்பேர்பட்ட வல்லமையுள்ள மாதாவை, அவர் திருமகன் இயேசுவிடம் எத்துனை செல்வாக்கு உள்ள மாதாவை நாம் பெட்டிசன் பெரிய நாயகியாகவே பார்க்கிறோம்; கேட்கிறோம்; நடத்துகிறோம்.

நாம் மோட்சத்தைப் பற்றி நினைக்கிறோமா? அதைத்தேடுகிறோமா? நாமும் நம்முடைய பிள்ளைகளும் அங்கு போகவேண்டும். கடவுளோடு வாழ வேண்டும். முடிவில்லா மகிழ்ச்சியில் கடவுளோடு என்னென்றும் இனைந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறோமா?

“ கடவுளின் அரசையும், அவருக்கு ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள். இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்”

மத்தேயு 6 : 33

ஆண்டவர் இயேசுவின் இந்த வார்த்தைகளுக்குச் செவி சாய்க்கிறோமா?

இந்த உலகத் தேவைகள் எப்போதாவது நின்று விடுமா? நாம் சாகும் வரை இவைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். என் பிள்ளைகளுக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று மட்டும் கேட்பவர்கள் முதுமையில் இப்படிக் கேட்பார்கள்.

“ என் பிள்ளை என் பேச்சைக் கேட்பதில்லை, என்னைக் கவனிப்பதில்லை. என்னை முதியோர் மடத்திற்கு அனுப்பி விட்டார்கள், வீட்டிலேயே நான் தனியாகத்தான் இருக்கிறேன். என்னை யாரும் கவனிப்பதில்லை”

உண்மையில் நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு உலகத்தேவைகளைத்தான் கொடுக்கிறோம். கடவுளைக் கொடுப்பதில்லை; ஜெபிக்க கற்றுக் கொடுப்பதில்லை; ஜெபமாலை ஜெபிக்க கற்றுக் கொடுப்பதில்லை. எத்தனைப் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பாவசங்கீர்த்தனம் செய்ய வலியுறுத்துகிறார்கள். நாம் நம்முடைய குழந்தைகளின் ஆன்மாக்கள் மேல் அக்கறை கொள்கிறோமா?

அவர்களுக்கு கடவுள் பயமில்லையென்றால் பெற்றோர்களை அவர்கள் வயது முதிர்ந்த காலத்தில் எப்படி பராமரிப்பார்கள். நம்முடைய பிள்ளைகளுக்கு பிறருக்கு உதவி செய்யக் கற்றுக்கொடுக்கிறோமா? தான தர்மம் செய்ய கற்றுக் கொடுக்கிறோமா?. அவர்களுக்கு இரக்கத்தைக் கற்றுக் கொடுக்கவில்லையென்றால் அவர்கள் எப்படி இரக்கத்தோடு வாழ்வார்கள்?

உண்மையில் சொல்லப்போனால் மாதாவையும், புனிதர்களையும் நாம் சரியாகப் பயன்படுத்துவதில்லை. மாதா எப்பேர்பட்ட வல்லமை உடையவர்கள். மாதாவின் மாசற்ற இருதயம் எத்தனைத் தீமைகளைத் தடுக்கிறது பாதுகாக்கிறது.

மாதா நம் தாய்தானே? அவர்களிடம் நாம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கிறோம். எப்போதாவது அந்தத் தாயிடம் நாம், “ அம்மா உனக்கு என்ன வேண்டும்?, நீங்க நல்லா இருக்கிறீர்களா?என்று கேட்டதுன்டா?

மாதா தனக்கு என்ன வேண்டும் என்று பாத்திமாவிலும், லூர்திலும் ஏற்கனவே கேட்டுவிட்டார்கள். ஆனால் நாம்தான் கொடுப்பதில்லை.

“ உலகம் சமாதானம் பெற ஜெபமாலை ஜெபியுங்கள்; பாவிகள் மனம் திரும்ப ஜெபியுங்கள்; ஜெப-தவ-பரிகாரங்கள் செய்யுங்கள்; உங்களை பலியாக்குங்கள் (பலி ஆன்மாவாக மாற்றுங்கள்). சேசுவின் இருதயத்திற்கும், என் இருதயத்திற்கும் ஆறுதல் தாருங்கள்; மனுமக்களின் பாவங்களால் நாங்கள் மிகவும் நொந்துபோயிருக்கிறோம்” என்று.

மாதாவின் இந்த வேண்டுதல்கள் நம் செவிகளில் கேட்கிறதா? அதற்கு நாம் செவி சாய்க்கிறோமா? துயரத்தால் கலங்கி நிற்கும், கண்ணீரோடு நிற்கும்,இரத்தக் கண்ணீர் வடிக்கும் இந்தத் தாயின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று நினைக்கிறோமா? ஜெபமாலையைக் கையில் எடுக்கிறோமா? நம்முடைய துன்பங்களை, அன்றாட சிலுவைகளை பாவிகள் மனம் திரும்ப ஒப்புக்கொடுக்கிறோமா?

காரிய பக்தி, சுய நலபக்தி என்ற கோட்டையை விட்டு நாம் எப்போது வெளியே வர போகிறோம்..

நம்முடைய தேவைகளைக் கேட்க வேண்டாம் என்று சொல்லவில்லை. கேட்கத்தான் வேண்டும். நாம் திருப்பலியில் பங்கேற்று நற்கருணை உட்கொண்டதும் நம் தேவைகளைக் கேட்கலாம். நம்முடைய ஜெபமாலையில் ஒரு பத்து மணிகளோ, இருபது மணிகளோ ஒப்புக்கொடுத்து ஜெபித்து கேட்கலாம். ஆனால் நம் தேவைகளுக்காக மட்டுமே மாதாவின் மேலும், புனிதர்கள் மேலும் பக்தி வைப்பது நியாயமா? அவர்களிடம் நிலையான செல்வமான, நிலையான மகிழ்ச்சியான மோட்சத்தைக் கேட்க வேண்டாமா? நாம் நம்முடைய பாவங்களை விட்டுவிட அவர்களின் துணையைக் கேட்க வேண்டாமா?

வெறும் காரிய பக்தி மட்டும் இருந்தால் போதுமா? நம்முடைய ஆன்மாக்கள் மேலும், நம் பிள்ளைகள் ஆன்மாக்கள் மேலும் நாம் அக்கறை கொள்ள வேண்டாமா? அதற்குத்தானே முக்கியமாக மாதா பக்தி, புனிதர்கள் பக்தி தேவை..

ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே..

ஜெபிப்போம், ஜெபிப்போம் ஜெபமாலை..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

முதல் வெள்ளி பக்தி முயற்சிநமது பாவங்களால் கடவுளின் இதயம் நோகடிக்கப்படுகின்றது.மனிதர்களின் உதவியும், ஆறுதலும் கடவுளுக்கு ...
05/06/2026

முதல் வெள்ளி பக்தி முயற்சி

நமது பாவங்களால் கடவுளின் இதயம் நோகடிக்கப்படுகின்றது.மனிதர்களின் உதவியும், ஆறுதலும் கடவுளுக்கு தேவைப்படுகின்றது என்ற *இரகசியம்* மனிதர்களுக்கு கடவுளால் தெரிவிக்கப்பட்டதே *திருஇருதய பக்தி.*

"நீயாவது எனக்கு ஆறுதல் கொடு" என்று புனித மார்கரீத் மரியம்மாள் வழியாக மனுகுலத்திடம் நம் ஆண்டவர் கேட்ட திரு இருதய பக்திமுயற்சி இன்று பல கிறிஸ்தவ குடும்பங்களால் கைவிடப்பட்டுவிட்டது.அடுத்த தலைமுறைகளுக்கு இதை பற்றி தெரியாத சூழ்நிலை உருவாகிவிட்டது.

ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளி திருஇருதய ஆண்டவரிடம் நமது உலக வரங்களை கேட்பதற்கு அல்ல. நாம்,நமது குடும்பம், நமது தலைமுறைகள் செய்த பாவங்களால் இயேசுவின் திருஇருதயத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு பரிகாரம் செய்து அவருக்கு ஆறுதல் தரவேண்டிய நாளே முதல் வெள்ளி.

*மனிதர்கள் கடவுளுக்கு உதவ முடியுமா ?ஆறுதல் தர‌முடியுமா ?*

இயேசுவின் சிலுவைப் பாதையில் சீமோன் , வெரோணிக்காமள் உதவியது போல இந்நாளில், நாமும் , நம் குடும்பமும் இயேசுவின் திரு இருதயத்தை காயப்படுத்தும் பாவங்களை தவிர்த்து புண்ணியங்களை செய்து, நமது பாவங்களுக்கு பரிகாரமாகவும், உலக மக்களின் பாவங்களுக்கு பரிகாரமாகவும், *நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து மாதத்தின் முதல் வெள்ளி அன்று திருப்பலியில் கலந்து கொண்டு பக்தி மரியாதையுடன் நற்கருணை பெற்று, இயேசுவின் திருஇருதய காயங்களுக்கு பரிகாராமாக நற்கருணை ஒப்புக்கொடுக்க வேண்டிய நாளே‌ முதல் வெள்ளி.* இந்த பக்தி முயற்சியே முதல் வெள்ளி பக்தி முயற்சி.

*போலி திரு இருதயபக்தி முயற்சிகளை தடுப்பதும் உண்மையான திருஇருதய பக்தி முயற்சிகளை இறைமக்களுக்கு கொண்டு செல்வதும் ஞானமேய்ப்பர்களின் கடமை*

திருஇருதய பக்தியாக தேர் இழுப்பதும், நேர்ச்சை செய்வதும், கேட்டது எல்லாம் திரு இருதய ஆண்டவரிடம் கிடைக்கும் என்ற தப்பறையான பக்தி முயற்சிகளால் உண்மையான திருஇருதய பக்தி முயற்சியை அழித்துவருகின்றன.

ஆண்டவர், மனிதர்களிடம் கேட்ட உதவியை பெறமுடியாமல் தடுப்பதற்கு அலகையின் சூழ்ச்சிகளை முறியடித்து,திருஇருதய ஆண்டவருக்கு முட்களான நமது பாவங்களை தவிர்த்து, செய்த பாவங்களுக்கு தகுந்த பரிகாரம் செய்யவேண்டும் என்ற உண்மையான திரு இருதய பக்தியை இறைமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது ஒவ்வொரு ஞானமேய்ப்பர்களின் பொறுப்பாகும்.

எனவே சக மனிதர் உதவிக் கேட்டால் உதவி செய்வோம்.பங்குதந்தை உதவி கேட்டால் செய்வோம், ஆயர் உதவி கேட்டால் செய்வோம்.ஆண்டவர் கேட்ட உதவியை இதுவரை செய்யமால் இருப்பது சரியாகுமா ? தெரிந்து கொள்ளாமல் இருப்பது நியமாகுமா ?திருஇருதய‌பக்தி ஒவ்வொரு கத்தோலிக்க குடும்பத்திலும் அனுசரிக்கப்பட்டால் எண்ணற்ற ஆன்மாக்கள் மனமாற உதவும்.

*திரு இருதயபக்தி முயற்சியை கடைப்பிடிப்போருக்கு நமது ஆண்டவரின் 12 வாக்குறுதிகள்*

1. அவர்கள் வாழ்க்கை நிலைக்குத் தேவையான அருளை வழங்குவோம்.

2. அவர்கள் குடும்பங்களில் அமைதி நிலவச் செய்வோம்.

3. எல்லாத் துன்பங்களிலும் அவர்களுக்கு ஆறுதலாக இருப்போம்.

4. வாழ்விலும், சிறப்பாக இறுதி வேளையிலும் அவர்களுக்குத் தவறாத அடைக்கலமாயிருப்போம்.

5. அவர்கள் முயற்சிகள் வெற்றிபெறத் திரளான அருளைப் பொழிவோம்.

6. நமது இருதயம் பாவிகளுக்கு இரக்கத்தின் ஊற்றும், கரைகாணா அன்புக் கடலுமாக இருக்கும்.

7. புண்ணிய வழியில் ஊக்கமற்றவர் பக்தி வேகத்தைப் பெறுவர்.

8. பக்தியுள்ளோர் புனித நிறைவை நோக்கி விரைந்து செல்வர்.

9. எந்த வீட்டில் நம் திரு இருதயப் படத்தை நிறுவித் தொழுவார்களோ, அந்த வீட்டை ஆசீர்வதிப்போம்.

10. கல் நெஞ்சரான பாவிகளை மனம் திருப்பும் வரத்தைக் குருக்களுக்கு அளிப்போம்.

11. திரு இருதய பக்தியைப் பரப்புவோரின் பெயர் நம் இதயத்தில் அழியாதபடி பொறிக்கப்படும்.

12. தொடர்ந்து ஒன்பது தலை வெள்ளிக் கிழமைகளில் நற்கருணையை உட்கொள்பவர்கள், தங்கள் பாவங்களுக்காக மனத்துயர் கொண்டு நன்மரணம் அடைவர். அவர்கள் நம் பகைவராகவோ, திருவருட் சாதனங்களைப் பெறாமலோ இறக்க மாட்டார்கள்.

முட்களால் சூழப்பட்டுள்ள இயேசுவின் திரு இருதய சொருபத்தின் முன் நின்று விண்ணப்பங்களை அடுக்காமல், அவர் திருஇருதயத்தை காயப்படுத்தும் நமது பாவங்களை நம் தலைமுறைகள் முற்றிலும் தவிர்த்து நம் இல்லத்தில் திரு இருதய அரசாட்சி நடைபெறுவதற்கு தேவையான பரிசுத்தமான‌ வாழ்க்கை வாழ்வோம்.

இயேசுவின் திருஇருதயமே !

எங்கள் மேல் இரக்கமாயிரும்
மரியாயின் மாசற்ற இருதயமே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுவின் திரு இருதய வணக்க மாதம்.2-ம் தேதி.திரு இருதயப் பக்தி எதில் அடங்கியிருக்கிறது.சேசுவின் திரு இருதயத்தை அன்பு செய்த...
02/06/2026

சேசுவின் திரு இருதய வணக்க மாதம்.

2-ம் தேதி.

திரு இருதயப் பக்தி எதில் அடங்கியிருக்கிறது.

சேசுவின் திரு இருதயத்தை அன்பு செய்து பக்தி செய்ய அனைவருக்கும் விருப்பம். ஆனால் பக்தியில் தவறான எண்ணங்கள் உண்டு. "சேசுவின் திரு இருதயமே! உம்மை அன்பு செய்கிறேன்" என்று அடிக்கடி சொல்லுவதிலும், நீண்ட செபங்கள் சொல்வதிலும், பாடல்கள் பாடுவதிலும், திருஇருதயப் பீடங்களில் மலர்களை வைத்து தீபங்களை ஏற்றுவதிலும் அடங்கியுள்ளது என சிலர் நினைக்கிறார்கள். இவையெல்லாம் நல்ல காரியங்கள் எனினும் இவை திருஇருதய பக்தியின் வெளி அடையாளங்கள் மட்டுமே ஆகும்.

"நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடிப்பீர்கள்." (அரு: 14:15) 'என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என் மீது அன்பு கொள்பவர் மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர்மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்." (அரு: 14 :21 என்றும் கூறுகிறார் சேசு கிறிஸ்து

உண்மையான அன்பு வார்த்தையில் மட்டுமல்ல, செயல்களிலும்தான் முக்கியமானதாய் விளங்குகிறது என்று அனைவரும் அறிந்து கொள்வர்.

என் தந்தையை வெகுவாய் அன்பு செய்கிறேனென்று சொல்லுகிற மகன், தந்தையுடைய கட்டளைகளைப் பரிகசித்து, அவருக்குக் கீழ்ப்படியாமல் தன் நடத்தையால் அவருடைய இதயத்தை வேதனைப்பட செய்வானேயாகில், அவன் தன் தந்தையை உண்மையாகவே அன்புசெய்கிறானென்று சொல்லலாமா?

சேசுவின் திரு இருதயத்தை அன்பு செய்கிறாயா இல்லையா என அறியவேண்டுமா? இதோ, மனது பொருந்தி எந்தப் பாவத்தையும் கட்டிக்கொள்ளாதபடி எச்சரிக்கையாயிருக்கிறாயா? தேவனுடையக் கட்டளைகளையும் திருச்சபைக் கட்டளைகளையும் கடைப்பிடிக்கிறாயா? குருக்களுக்கு மரியாதை செய்து கீழ்ப்படிகிறாயா? திருஇருதயத்துக்கு வணக்கமாக தனியாக முயற்சி செய்து உன் தீய விருப்பங்களின் மேல் வெற்றி கொண்டு, சில குறைந்த நிந்தைகளையாகிலும் பொறுமையோடு ஏற்றுக் கொண்டு சகலருக்கும் பிறரன்பைக் காட்டுகிறாயா? செபம், புத்திமதி மற்றும் உன் நன்மாதிரிகையால் ஆத்துமாக்களை மீட்க முயற்சி செய்கிறாயா? இவை போன்ற முயற்சிகள்தான் சேசுவின் திரு இருதயத்தை நாம் அன்பு செய்கிறோம் என்பதற்கு அடையாளம். வார்த்தைகளால் மட்டுமல்ல; செயல்களாலும், ஒறுத்தல் முயற்சிகளாலும் விளங்குகிற அன்புதான் சேசுவின் திருஇருதயத்தின் உண்மையான அன்பு ஆகும்.

சேசுக்கிறிஸ்து நமக்காக இவ்வுலகத்தில் வந்து பாடுபட்டு நமது அன்பிற்காக தமது 33 வருடங்களும் நிந்தை அவமானங்கள் அனுபவித்து சிலுவையில் வருந்தி பாடுபட்டு தமது இரத்தமெல்லாம் சிந்தி உயிரைக் கொடுத்தார். உலகம் முடியும் மட்டும் நம்மோடுகூட இருக்கவும், நமது ஆன்மாவிற்கு உணவாகவும் நற்கருணையை உண்டாக்கினார்.

சேசு நமது மட்டில் காண்பித்த இந்த அன்பை உணர்ந்துதான் புனிதர்கள் நமது ஆண்டவரைப் பின்பற்றினார்கள். ஸ்மர்னா நகரத்து ஆயராகிய புனித இஞ்ஞாசியாரை மதத்திற்காக உயிரைவிட உரோமா புரிக்குக் கூட்டிக் கொண்டுபோகும் போது அவர் தமது கிறிஸ்தவர்களுக்கு எழுதியது: "நான் கிறிஸ்துவுக்காக என் உயிரை விடப் போவதை உங்களுக்கு அறிவிக்க நான் மிகுந்த பாக்கியம் பெற்றவன், என்னை சுட்டெரிக்கலாம், சிலுவையில் அறையலாம் அல்லது விலங்குகளுக்கு இரையாக்கலாம் பரவாயில்லை. இவைகளையெல்லாம் ஆண்டவருக்காக மிக சந்தோஷமாய் அனுபவிப்பேன். இவை என்னை, என் உயிரும் அன்புமாகிய கிறிஸ்துவிடம்" கொண்டு சேர்க்கும்.

இதுவே அப்போஸ்தலர்களிடத்திலும், வேதசாட்சிகளிடத்திலும், புனிதர்களிடத்திலும் விளங்கிய உன்னதமான பற்றுதல். இப்போதுகூட எத்தனையோ மத போதகர்கள், தங்கள் தாய் தந்தையர், சுற்றத்தார், நண்பர்கள், சொந்த நாடு முதலானவைகளை விட்டு மிகத் தொலைவான வேறு நாடுகளுக்குச் சென்று கிறிஸ்தவர்களை மீட்கவும், பிற மதத்தினருக்குப் போதிக்கவும் வருந்தி உழைத்து, தங்கள் வாழ்நாட்களை செலவழிக்கிறார்கள். இதற்குக் காரணம், சேசுவின் அன்புக்கும் அவருடைய திரு இரத்தத்தால் மீட்டு இரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்களின் அன்புக்கு மட்டுமேயன்றி வேறல்ல.

கிறிஸ்தவ நாடுகளிலுள்ள மருத்துவமனைகளைப் பாருங்கள். அங்கே தங்கள் சொத்து, சுகம், விருப்பங்கள் அனைத்தையும் கடவுளுக்காக வெறுத்து ஒதுக்கிவிட்ட கன்னியர்கள், துறவியர்கள் தாங்கள் ஒருபோதும் கண்டிராத நோயாளிகளுக்கு அக்கரையுடன் பணிவிடை செய்து வருவதைக் காண்பீர்கள். இச்செயலைச் செய்ய தூண்டுவது சேசு கிறிஸ்துவின் அன்பு மட்டுமே. இன்னும் புண்ணியவான்களாகிய சில கிறிஸ்தவர்கள், தங்கள் நன்மாதிரிகையாலும், தாராள குணத்தினாலும், மற்ற கிறிஸ்தவர்களுக்கு முன்னுதாரணமாக நடக்கவும், தங்கள் சகோதரருடைய முன்னேற்றத்துக்காக உழைத்து துன்பப்பட வேண்டிய பிரமாணிக்கத்தையும், தளராத ஊக்கத்தையும் அவர்கள் இதயத்தில் தூண்டி வளர்ப்பது சேசுவின் பேரில் அவர்கள் வைத்த அன்பே. எடுத்துக்காட்டாக அன்னைத் தெரசாவின் தீவிர செயல்கள்.

நமது ஆண்டவரை உண்மையாகவே அன்பு செய்கிறோமென்று காட்ட நாம் இப்போது என்ன செய்கிறோம்? இனி என்ன செய்யப்போகிறோம்? இரண்டாம் முறையாக சேசு அவரிடம் "யோவானின் மகன் சீமோனே நீ என் மீது அன்பு செலுத்துகிறாயா? என்று கேட்டார். அவர் சேசுவிடம், ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! என்றார். சேசு அவரிடம், என் ஆடுகளை மேய் என்றார்" (அரு: 21:16. இராயப்பரிடம், "சீமோனே நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா என்று கேட்டது போல் நம்மிடமும் கேட்டால் நாமும் சீமோன் இராயப்பரைப் போல ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா " (அரு: 21:17) என்று பதில் சொல்லுவோமா? இராயப்பரைப் போன்று நாமும் சேசுவின் திரு இருதயத்திற்கு நமது அன்பைக் காண்பிக்க வேண்டுமானால் நம்முடைய வாழ்வு உண்மையான கிறிஸ்தவனுக்குரிய உத்தம வாழ்வாகவும், சேசுவின் திரு இருதயத்திற்கு விருப்பமான வாழ்வாகவும் இருக்கவேண்டும். இவ்வுலக தீய நாட்டங்களை விலக்கித்தள்ள வேண்டும். கிறிஸ்தவ கடமைகளை நிறைவேற்றுவதிலும், சேசுவின் திரு இருதயத்திற்கு உகந்த புண்ணியங்களாகிய தாழ்ச்சி, பிறரன்பை கடைப்பிடிப்பதிலும் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.

நமது இருதயத்தில் திருஇருதய அன்பும், பாவ நாட்டமும் ஒன்றாகக் குடியிருக்க முடியாதென்பதை மறந்துப் போகக் கூடாது. நமது விருப்பு வெறுப்புகளை சேசுவின் திரு இருதய அன்பிற்காக வெறுத்து வெற்றி கொண்டு புனிதர்களைப் போல் சேசுவின் திருஇருதயத்தோடு என்றும் நிலைத்திருக்க தீர்மானிப்போம்.

புனித மார்கரீத் மரியா சொல்வதைக் கேளுங்கள்: நமது இருதயம் எவ்வளவு சிறிதாக இருக்கிறதென்றால் அதில் இரண்டு அன்பு இருக்க இடமில்லை. தேவனுடைய அன்புக்காக மட்டும் நமது இருதயம் படைக்கப்பட்டிருப்பதால் அந்த இருதயத்தில் வேறு அன்பும் நுழைவதால் அதற்கு சமாதானமே கிடையாது.

செபம் :

சேசுவின் மதுரமான திரு இருதயமே, என் சிநேகமாயிரும்.

சேசுவின் திருஇருதய நவநாள்.

கேளுங்கள் கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்று திருவுளம் பற்றியிருக்கிற திவ்விய சேசுவே, தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி ஆராதனைக்குரிய உமது திருநாளில் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக்கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக்கொள்ளும் மன்றாட்டு ஏதென்றால்...

(வேண்டியதை உறுதியோடு கேட்கவும்)

சகல நன்மைகளுக்கும், பேறுபலன்களுக்கும் வற்றாத ஊரணியாகிய தேவரீருடைய திருஇருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப்போகிறேன். தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப்போகிறேன். தாமே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திருஇருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே நான் தட்டிக் கேட்கப்போகிறேன். ஆகையால் என் நேச சேசுவின் திருஇருதயமே தேவரீருடைய தஞ்சமாக ஒடிவந்தேன். இக்கட்டு இடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே. சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவிரென்று நம்பியிருக்கிறேன்.

தேவரீர் சித்தம் வைத்தாலே போதும். என் செபம் பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே, தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுவதும் அபாத்திரவான் தான், ஆகிலும் நான் இதனாலே அதைரியப்பட்டு பின்னடைந்து போவேனல்ல; தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தை தேவரீர் தள்ளுவீரல்ல. உமது இரக்கமுள்ள கண்களால் எங்களை நோக்கியருளும். என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கு இரங்காமற் போகாது.

இரக்கமுள்ள திருஇருதயமே! என் விண்ணப்பத்தின்மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே! தேவரீரை நான் வாழ்த்தி வணங்கி போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே! ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதய தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியை கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும். நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன்.

சேசுமாமரி இருதயங்களின் சிநேகிதரான அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக சேசுவை மன்றாடும்

தொடரும்....

ஆமென்.

I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
17/04/2026

I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

12/04/2026

இறைவனின் இரக்கம் பாவம் செய்வதற்கான அனுமதி அல்ல, பாவம் செய்வதை தவிர்த்து, மனந்திரும்புவதற்கான அழைப்பு.

இந்த இறை இரக்க பெருவிழா, கடவுளின் இரக்கம் நம்மை எப்போதும் மன்னிக்கும்,அதனால் தண்டனையின்றி தொடர்ந்து பாவம் செய்ய அனுமதிக்கிறது என்று தவறாக கருத வேண்டாம்.

பாவம் செய்வதை நிறுத்தவும், புதியவர்களாகவும், மாறுப்பட்டவர்களாகவும், மாற்றமடைந்தவர்களாகவும் வாழ உதவுமாறு அவருடைய இரக்கத்தை கேளுங்கள், இதனால் அவர் நம் வழயாகவே உலகிற்கு இரக்கத்தின் நம்பிக்கையை வழங்க முடியும்.

DIVINE MERCY IS NOT A LICENSE TO SIN BUT A CALL TO REPENTANCE.

On this Divine Mercy Sunday, don't presume that God's mercy allows us to continue sinning with impunity because He will always forgive.

Rather, ask Him in His mercy to help us STOP SINNING, to be new, different, transformed, so that through us He can offer the world the mercy of hope.

இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உங்களுக்குத் தெரியுமா? இறை இரக்க ஞாயிறு (ஏப்ரல் 12, 2026) என்பது வெறும் சாதாரண நாள் அல்ல — இது அளப்பரிய அருட்கொடைகள் பொழ...
12/04/2026

உங்களுக்குத் தெரியுமா?

இறை இரக்க ஞாயிறு (ஏப்ரல் 12, 2026) என்பது வெறும் சாதாரண நாள் அல்ல — இது அளப்பரிய அருட்கொடைகள் பொழியும் ஒரு நாள்!

இறை இரக்கத்தின் திருவுருவப்படம்: இயேசுவின் இதயத்திலிருந்து புறப்படும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கதிர்கள், சிலுவையில் அவரது விலாவிலிருந்து வழிந்தோடிய இரத்தத்தையும் நீரையும் குறிக்கின்றன. இவை நற்கருணை மற்றும் திருமுழுக்கு ஆகிய அருட்சாதனங்களின் அடையாளங்களாகும்.

வாக்குறுதி: இந்த நாளில் எவரொருவர் தகுந்த தயாரிப்புடன் ஒப்புரவு அருட்சாதனம் (Confession) பெற்று, திவ்விய நற்கருணையை உட்கொள்கிறார்களோ, அவர்கள் "பாவங்களிலிருந்தும், அந்தப் பாவங்களுக்கான தண்டனைகளிலிருந்தும் முழுமையான மன்னிப்பைப்" பெறுவார்கள் என்று இயேசு புனித பாஸ்டினாவிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.

இயேசுவே, உம்மீது நான் நம்பிக்கை வைக்கிறேன்..

☦️ ஆன்ம உடல் நலம் பெற வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னையை நோக்கி மன்றாட்டு🌻🌻🌻🌻🌻🌻🌻🌻கன்னி மரியே! ஆரோக்கிய அன்னையே! என் ஆண்டவள...
10/04/2026

☦️ ஆன்ம உடல் நலம் பெற வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னையை நோக்கி மன்றாட்டு

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

கன்னி மரியே! ஆரோக்கிய அன்னையே! என் ஆண்டவளே! இறைவன் எனக்களித்த உண்மையான ஆறுதலே! இடுக்கண்களில் இளைப்பாற்றியளிக்கும் விண்ணகப் பத்தினியே! பாவ இருளில் அகப்பட்டுத் தவித்திடும் ஆன்மாவின் ஒளிச் சுடரே! திருப்பயணத்தில் வழிகாட்டியே! பலவீனத்தில் வலிமையே! ஏழைகளின் ஆறுதலே! நோயுற்றவர்களின் அரும் மருந்தே! பாவிகளின் தஞ்சமே! என் மீட்பின் நம்பிக்கையே!

எல்லையற்ற முறையில் அன்பு செய்யும் இறைவனுக்கு நீர் தாயானதால், உமது மேலான மகத்துவத்திற்கேற்ப என் மீது இரக்கம் காட்டியருளும். என் தேவைகளை எல்லாம் அறிந்துள்ள உம்மிடம் என் மன்றாட்டுக்களைச் சமர்ப்பிக்கிறேன்.

_(உங்கள் மன்றாட்டுக்களை இப்போது மௌனமாக நினைவு கூறவும்)_

விண்ணக மண்ணக அரசியே! கருணை நிறைந்த மாமரியே! பாவிகளின் தஞ்சமே! பாவக்கடலில் அமிழ்ந்தவர்களுக்குத் தெப்பமே! உலகத்திற்கெல்லாம் தயாபரியே! அடிமையானவர்களை மீட்கின்ற ஆண்டவளே! நோயாளிகளுக்கு ஆரோக்கியமே! உள்ளம் வேதனைப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! இவ்வுலக வாழ்வின் இருப்பிடமே!

தஞ்சமென்று நாடி வந்திருக்கும் என்னைப் புறக்கணியாது, நான் கேட்கின்ற சகாயத்தை அடைந்து தந்தருள உமது திரு மகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவை மன்றாடும் தாயே.

*ஆமென்.*

🫐🫐🫐🫐🫐🫐🫐🫐

Address

Nagapattinam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joseph Vital Prasath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Joseph Vital Prasath:

Shortcuts

Share