02/04/2026
யோபு பாவத்தினால் துன்பப்படவில்லை... தேவன் சாத்தானுடன் ஒரு பந்தயம் வைத்ததால் அவர் துன்பப்பட்டார்..!
ஆம்..
யோபு பாவத்தினால் துன்பப்படவில்லை... தேவன் சாத்தானுடன் ஒரு பந்தயம் வைத்ததால் அவர் துன்பப்பட்டார்.
துன்பம் எப்போதும் குற்றம் செய்வதால் வருகிறது என்று மக்கள் கூறுகிறார்கள்.
தேவன் உங்களைத் தண்டிக்கிறார் என்பதற்கு நீங்கள் அனுபவிக்கும் வலியே ஆதாரம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
உங்கள் பரிசுத்த வாழ்க்கை தோல்வியடைந்ததால் மட்டுமே கஷ்டம் வருகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இது பொதுவான ஒரு பார்வை..!
ஆனால் வேதாகமம் இதைவிட அதிகமாக ஆழமாக பேசுகிறது.
இனி யோபு புத்தகத்தை நீங்கள் வாசிக்கும் போது இந்த உண்மைகளை நினைவில் வையுங்கள்:
இதோ:
1️⃣ துன்பம் தொடங்குவதற்கு முன்பு யோபு நீதிமானாக இருந்தார்
→ யோபு 1:1
“அவன் உத்தமனும் சன்மார்க்கனுமாக இருந்தான்.”
யோபு இரகசியமாகப் பொல்லாதவனாக இருந்ததால் அவனது வேதனை தொடங்கவில்லை..!
2️⃣ தேவனே யோபுவின் நீதியைக் குறிப்பிட்டார்
→ யோபு 1:8 “பூமியில் அவனைப் போன்றவன் ஒருவனும் இல்லை.”
தேவன் யோபுவை ஒரு பாசாங்குக்காரனாக வெளிப்படுத்தவில்லை. அவர் அவனை உண்மையுள்ளவனாக அடையாளம் காட்டினார்.
3️⃣ சாத்தான் யோபின் நோக்கங்களைத் தாக்கினான், அவனுடைய ஒழுக்கத்தை அல்ல
→ யோபு 1:9 முதல் 11 வரை
“யோபு காரணமின்றி தேவனுக்குப் பயப்படுகிறானா?”
வாழ்க்கை எளிதாக இருப்பதால் மட்டுமே யோபு தேவனை நேசிக்கிறான் என்பதே குற்றச்சாட்டாக இருந்தது.
4️⃣ யோபு மீது பாவம் சுமத்தாமல், தேவன் சோதனையை அனுமதித்தார்
→ யோபு 1:12
“இதோ, அவனுக்குரிய யாவும் உன் கையில் இருக்கிறது.”
இது சோதனைக்கான அனுமதியே தவிர, குற்றத்திற்கான ஆதாரம் அல்ல.
5️⃣ யோபின் துன்பம் ஒரு ஆவி தளத்தில் நடக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது
→ யோபு 1:6
“சாத்தானும் அவர்கள் நடுவே வந்தான்.”
யோபின் வீட்டை பூமி தளத்தில் தொடுவதற்கு முன்பே உண்மையான பந்தயம் ஆவி தளத்தில் தொடங்கி இருந்தது.
6️⃣ யோபின் நண்பர்கள் யோபு பட்ட பாடுகள் பற்றித் தவறாகக் கணித்திருந்தனர்
→ யோபு 42:7 “என் ஊழியனாகிய யோபுவைப் போல, நீர் என்னைக் குறித்து நீதியானதைச் சொல்லவில்லை.”
துன்பம் வருவது எப்போதும் பாவத்தினால் தான் என்ற கருத்தை இந்த வசனம் நேரடியாகக் கண்டிக்கிறது.
7️⃣ யோபு விரும்பியும் அவனுக்கு முழுமையான விளக்கம் கிடைக்கவில்லை — மாறாக அவருக்குக் கிடைத்தது தேவனைக்குறித்த வெளிப்பாடு..!
→ யோபு 38:4 “நான் பூமிக்கு அஸ்திவாரம் போட்டபோது நீ எங்கே இருந்தாய்?”
தேவன் யோபுவுக்கு விரிவான வாக்கு வாதத்தால் அல்ல, தமது மகத்துவத்தை எடுத்துச் சொல்லி பதிலளித்தார்..!
எனவே..
யோபு பாவம் செய்ததால்..பாவியாக இருந்ததால் துன்பப்படவில்லை..!
தேவன், அவனது விசுவாசம், நீதி உண்மையானது என்று நிரூபிக்க விரும்பினதால்..
தேவனுக்கும் சாத்தானுக்கும் நடந்த பந்தயத்தில் அவன் ஜெயிப்பான் என்று தேவன் நம்பியதால் துன்பப்பட்டான்..!!
ஆமென்.