27/02/2023
உலகில் கிளி பிள்ளை என்ற சொல்லுக்கு ஒரு எடுத்துக்காட்டு நம்ம ஐயா தான் யா... 😍
ஏன் தெரியுமா???
சுந்தரர் சொன்னதுக்கெல்லாம் கேட்டுகிட்டு நடந்தானே யா நம்ம ஐயா... 😭
எளிமையிலும் எளிமை யா நம்ம ஐயா... 🥹🥹🥹
திருவாரூர் வீதியில் திருவடித் தேய நடந்தானே அவன் கால் எந்த அளவு நொந்திருக்குமோ!
சுந்தரனின் வசைப் பாட்டுகளை இசை என ஏற்றானே, அவன் மனசு எந்த அளவுக்கு சங்கடப்பட்டிருக்கும் 😭
வாதவூரனுக்காக பிரம்பால் முதுகில் அடிவாங்கினானே, அவன் முதுகு எப்படி நொந்திருக்கும்! 😭
பாணபத்திரணுக்காக, மதுரை வீதியில் கொதிக்கும் வெயிலில் தலையில் விறகு சுமந்தானே, அவனுக்கு என்ன யா தலை எழுத்து? 😭
தன் மேல் சாக்கியன் எறிந்த கல்லை அன்பென ஏற்றுக்கொண்டானே, உடம்பு எல்லாம் வலித்திருக்குமே என் தங்கத்துக்கு. 😭
இறைவனையே புறகு என்று கூறி ஒதுக்க நினைத்த விரன்மிண்டரை பார்த்து எங்கே அவனை அடியவர்கள் ஒதுக்கி விடுவார்களோ என்று பயந்து அவன் அன்புக்கு இசைந்தானே நம்ம ஐயா, எந்த அளவுக்கு உள்ள ஏக்கம் இருந்திருக்கும் யா என் தங்க புள்ள மனசுல.. 😭
இத்தனையும் என் யா அவனுக்கு நடக்கணும்,
தனக்கென ஒரு தாய் , தந்தை அற்றவன் தானே, கேட்க நாதியில்லை என்று அந்த மனசு எவ்வளோ பாடுபட்டிருக்கும்??
இத்தனையும் தாங்கிகிட்டு அவன் அவனை நினைப்பவர்களுக்கு திருவருளை வாரி வாரி பொழியுறானே, அவன் தானே யா ஏழை பங்காளன்.
நாம எல்லாரும் அவன் முன்னாடி நின்னு, எனக்கு இது வேணும், அது வேணும் என்று கேட்கிறோமே, ஒரு முறையாச்சும் எனக்கு நீ வேணும் என்று நாம கேட்டிருக்கிறோமா??
அந்த மனசு எவ்ளோ ஏங்கி இருக்கும்..
ஆனாலும் அந்த ஜீவன் நம் ஜீவனை விடவில்லையே யா.. அது நம்ம கை புடிச்சு கூட்டிட்டு போகுதே. நல்ல விஷயங்களை செய்ய நம்மை பணிக்குதே, அடியவர்களுக்கு தொண்டு செய்யும் பெறுதற்கு அறிய பேறை தருகிறதே.
எவ்வளோ எளிமை யா நம்ம ஐயா..
அவனால் முடியாத விஷயம் ஒன்று உள்ளது, அது அவன் அடியவர்களை விட்டு அவனால் இருக்க முடியாது.
என் தங்கம் அது, நாம அந்த தங்கத்தை விட கூடாது. கூடவே, சாகுற வரைக்கும் அந்த தங்கத்துக்கு தொண்டு பண்ணனும். நம்மை விட்டா அந்த ஜீவனுக்கு யாரும் இல்லை.. 😭
- என்னை பிடித்த பித்தனை, நான் பித்தாக பிடித்தேன் சிக்கென! ❤️
இது:
மாமூலனின் மீளா அடிமைகளில் ஒன்று.