அக்னி குருதி

அக்னி குருதி அரசியல் அதிகாரம் + சமுதாய ஒற்றுமை 💛🏇🤺
(2)

29/05/2026

பொதுநலத்தோடு இருப்பவர்கள் தான் அரசியல் தலைவர்கள்.
பொறுப்பற்றவர்களுக்கு அந்த பெயர் பொருந்தாது
இன்னும் ரசிகர் மன்ற டிக்கெட் விற்பனையாளர் போன்று தான் இருக்கிறார் 🫡

யார் தான் பொறுப்பு ???கள்ளக்குறிச்சி மாவட்டம் தொடர்ந்து பேருந்து வசதியின்றி வஞ்சிக்கப்படும் மாவட்டமாக இருந்து வருகிறது. ...
29/05/2026

யார் தான் பொறுப்பு ???

கள்ளக்குறிச்சி மாவட்டம் தொடர்ந்து பேருந்து வசதியின்றி வஞ்சிக்கப்படும் மாவட்டமாக இருந்து வருகிறது. நிர்வாகிகள் எந்த ஒரு சரியான போக்குவரத்தையும் கையாளாமல்
மாவட்டம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து கூட அனைத்து திசைகளிலும் இயங்காதது அவலத்தின் உச்சம்.

புதிய பேருந்து நிலையம் கள்ளக்குறிச்சிக்கு வந்த சாபம். அது ரியல் எஸ்டேட் விற்பனைக்காக போடப்பட்ட செட்டிங்.

இந்த நிலையில் எங்கு வெளியூர் செல்ல வேண்டும் என்றாலும் புதிய பேருந்து நிலையம். உள்ளூருக்கு போக வேண்டும் எனில் கட்டாயம் பழைய பேருந்து இங்குள்ள இரண்டு பேருந்துகளில் மட்டுமே செல்ல வேண்டும்.

ஒரு தரங்கெட்ட வடிவமைப்பை இங்கேயும் திருவண்ணாமலையிலும் ஏற்படுத்தியுள்ளனர்.

இத்தோடு மட்டுமா சரியான போக்குவரத்து பராமரிப்பும் இல்லை.

யார்தான் பொறுப்பு ?

மணிக்கணக்கில் வெயிலில் நின்று பேருந்தில் ஏறினால்
ஒரு மணி நேரம் டிப்போ வில் இறக்கிவிட்டு செல்கின்றனர்.

மூன்று பேருந்துகள் அங்கிருந்து சென்ற போதும் மக்களை ஏற்ற வில்லை.

இது யாரைக் கேட்டு எடுக்கும் முடிவு?

மக்களுக்கான அரசா இல்லை
அரசு என்ன செய்தாலும் தாங்கிக்கொள்ள மக்கள் தயாராக வேண்டும் 👺

29/05/2026

சம்பந்தமே இல்லாமல் திடீரென காட்டுக்குள் சென்ற அரசுப்பேருந்து.
பயணிகள் கத்தியதைத் தொடர்ந்து
ஒரு பேருந்து மாற்றனும் என்று கூறிவிட்டு எடுத்துச் சென்றனர்.

ஆனால் அங்கே வேறு மூன்று பேருந்துகள் சின்ன சேலம் கிளம்பியது ஆனாலும் சுமார் எழுபது பேரை ஒரு மணி நேரமாக காக்க வைத்து பின்பு
அதே பேருந்தில் அனுப்பினர்.

எதற்காக வந்தார்கள் எதற்காக மீண்டும் அதே பேருந்தில் சின்ன சேலம் அனுப்பியிருக்கலாமே என்று பொதுமக்கள் வேதனை.

அலட்சியமாக திட்டிய அந்த புளு சட்டைக்காரர். இப்படி ஒரு மணிநேரம் கழித்து அந்தப் பேருந்து மக்களின் கூச்சலுக்குப் பின் சின்ன சேலம் வந்தடைந்தது.

சரியான பேருந்து வசதியில்லாத நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுக்க மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

புதிய அமைச்சர் என்ன செய்துகொண்டுள்ளார் ?
அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டு கொள்வாரா ?
யாருக்காகன அரசு என்று கூறி ஓட்டு வாங்கினீர்கள் என்று தெரியுமா ?

இடம் : சின்ன சேலம் அரசுப் பேருந்து பணிமனை
நேரம்: 3.40 முதல் 4.40 வரை
தேதி : 29/5/2026

TVK worst government 😏

28/05/2026

இந்த வசந்தம் கள்ளச்சாராயம் கார்த்திகேயன் பத்தி பல முறை நாம சொல்லியிருக்கோம் அவ்வளவு அடாவடி, கட்ட பஞ்சாயத்து, கொள்ளை என அத்துணை இல்லீகள் வேலையும் பார்த்த நபர்.

திருவண்ணாமலை வேலு போல , விழுப்புரம் பொன்முடி போல தன்னை கள்ளக்குறிச்சியில் நிலைநிறுத்த அவர்கள் பாணியிலேயே சாதி அரசியலை முன்னெடுத்தவர் தான் இந்த வசந்தம் உடையார் சமுதாயம் தவிர வேறு எந்த சமுதாயமும் இவருக்கு பிடிக்காது அவ்வளவு கேவலமாக நடத்த கூடிய நபர்.

28/05/2026

ஸ்டாலின் கூட முதலீடு ஈர்க்கிறேன்னு வெளிநாட்டுக்கு போய் சும்மா சுதிபாத்திடாவது வந்தாரு இந்த அக்கா என்னடான இன்ஸ்டாவில முதலீடு ஈர்க்குது உண்மையாவே நாம இந்தியாவுல தானிருக்கோமா ?

27/05/2026

இந்த பதிவை போஸ்ட் பண்ண விசிகவை சார்ந்த நபரின் வீட்டுக்கே போய் அவுங்க வீட்டு ஆளுங்களை மிரட்டி பதிவை பிரிண்ட் எடுத்து ஒட்டியிருக்காங்க திமுக காரங்க🖤❤️🫡

என்னங்கடா இப்படி இறங்கிட்டீங்க இது தான் 70 வருஷ பாரம்பரியமா

நீ அடித்து ஆடு தலைவா நன்றி கெட்ட அந்த மனிதர்களை காலம் பார்த்துக்கொள்ளலாம். #சிவிசண்முகம்
27/05/2026

நீ அடித்து ஆடு தலைவா
நன்றி கெட்ட அந்த மனிதர்களை
காலம் பார்த்துக்கொள்ளலாம்.

#சிவிசண்முகம்

Cve சண்முகம் 10.5% சட்டம் கொண்டுவர எடப்பாடிக்கு அதிமுகவில் இருந்து நெருக்கடி கொடுத்த ஒரே வன்னியர் Cve சண்முகம் மட்டுமே.!...
27/05/2026

Cve சண்முகம் 10.5% சட்டம் கொண்டுவர எடப்பாடிக்கு அதிமுகவில் இருந்து நெருக்கடி கொடுத்த ஒரே வன்னியர் Cve சண்முகம் மட்டுமே.!

எடப்பாடி எனும் மண்குதிரை அன்று சசிகலா, TTV,OPSயை ஓரம் கட்டி தேவர் சமூகத்தை நேராக எதிர்த்தார் இன்று வன்னியர் சமூகமா...?

சிவி சண்முகத்தை தனித்து விட்டு கொங்கு கவுண்டர் தங்கள் வேலையை காட்டிவிட்டார்கள், எஸ்பி வேலுமணியை சட்டமன்ற குழு தலைவராக அறிவித்து தான் சண்டையே ஆரம்பித்த நிலையில் சிவி சண்முகம் மட்டும் தனித்துவிடப்பட்டு கொங்கன்கள் கொங்கன்களோடு சேர்ந்து கொண்டனர்.

வன்னியர்கள் எப்போது தான் அடுத்தவனுக்காக சண்டை இடும் கருவி மட்டுமே அதிகாரம் கிடைக்காது !!!

27/05/2026

பவர் ஆப் பஞ்சாயத்து ☠️🤡

27/05/2026

பயிர் கடன் தள்ளுபடி என்ற பெயரில் மோசடி செய்த தமிழக அரசை கண்டித்து

கொடுத்த வாக்குறுதிபடி விவசாய பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்ச்சியர் அலுவலகம் எதிரில் விவசாயிகள் தற்போது ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

"அரசியல் சட்டத்துக்கு மேலானவரா தவெக எம்.எல்.ஏ? ஆபத்தான, சட்டவிரோத ஆலோசனைகளை நிறுத்தங்கள்!"2026 இந்திய அரசின் திடக்கழிவு ...
27/05/2026

"அரசியல் சட்டத்துக்கு மேலானவரா தவெக எம்.எல்.ஏ? ஆபத்தான, சட்டவிரோத ஆலோசனைகளை நிறுத்தங்கள்!"

2026 இந்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு குற்றச்செயலை - ஒரு தீர்வாக அறிவித்துள்ளார் தவெக சட்டமன்ற உறுப்பினர்!

“திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் குவிந்துள்ள சுமார் 7 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை, துவாக்குடி அருகே உள்ள சுமார் 1700 அடி ஆழமுள்ள பாறைப் பள்ளத்தில் கொட்டினால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது - திருவெறும்பூர் தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி”

- இப்படி செய்திகள் கூறுகின்றன.

இது மிக மிக ஆபத்தான ஆலோசனை ஆகும். நிலத்தடி நீர் மாசு, காலநிலை மாற்றத்தை அதிகமாக்கும் மீத்தேன் மாசுபாடு, காற்று மாசுபாடு, உடல்நல பாதிப்பு என பல கேடுகளுக்கு இது வழிவகுக்கும்.

இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழான 2026 திடக்கழிவு மேலண்மை விதிகளின் படி, குப்பையை கல்குவாரியில் கொட்டுவது ஒரு சட்டவிரோத செயலாகும். இந்த குற்றத்திற்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும்.

இந்திய ஜனநாயக அரசமைப்பில் - தவெக கட்சியோ, அமைச்சர்களோ, எம்.எல்.ஏக்களோ சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை. இந்த உண்மையை இவர்களுக்கு யாராவது எடுத்துச் சொல்ல வேண்டும்.

Address

Jayankondam
612901

Alerts

Be the first to know and let us send you an email when அக்னி குருதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to அக்னி குருதி:

Share