St.Antony The Hermit's Church

St.Antony The Hermit's Church புனித வனத்து அந்தோணியார் ஆலயம் .

14/08/2025
07/03/2025

Pope Francis releases an audio message to thank everyone who has been praying for his health.

The audio clip was broadcast in St. Peter’s Square on Thursday, March 6, as Cardinal Ángel Fernández Artime led the nightly Rosary prayer.

18/08/2023

*இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*

*18.08.2023 (வெள்ளி)*

*துயர்நிறை மறையுண்மைகள்.*

*1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,*

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
*"இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்”.* என நமதாண்டாவர் இயேசு கூறுகிறார்.

குடும்ப செபம் செய்யும் குடும்பங்களில் குழப்பங்கள் ஒரு போதும் வருவதில்லை. குடும்ப சமாதானத்திற்கு ஊறு விளைவிக்கும் சாத்தானை குடும்ப செபமாலையால் நாம் விரட்டி அடிக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

*2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,*

மரியாளின் மாசற்ற திரு இருதயத்திற்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட இந்த ஆகஸ்டு மாதத்தில் நாம் நமது செபமாலை மணிகளால் மரியாளின் மாசற்ற இருதயத்திற்கு ஆறுதல் தரவேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

*3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,*

ரோமப் பேரரசியும், இன்றையப் புனிதருமான புனித ஹெலெனா, தனது ஜெருசலம் புனிதப் பயணத்தின் போது ஆண்டவர் இயேசு அறையப்பட்ட திருச்சிலுவையைக் கண்டுபிடித்தார்.

கிறித்துவர்களின் அடையாளமாக விளங்கும் திருச்சிலுவை யின் மாட்சியை மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளவும், திருச்சிலுவை பக்தி பெருகிடவும் மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

*4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,*

வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்க இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

*5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,*

நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

*ஆமென்.*

17/08/2023

இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

17.08.2023 (வியாழன்)

ஒளி நிறை மறையுண்மைகள்.

1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 114:3-ல்,
"செங்கடல் கண்டது; ஓட்டம் பிடித்தது; யோர்தான் பின்னோக்கிச் சென்றது." என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.

தன்னைப் படைத்த இறைவனுக்கு இயற்கை பணிந்தது போல, நாமும் நம்மைப் படைத்தவருக்கு எந்நாளும் பணிந்திருக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
"ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன்." என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

நமக்குத் தொடர்ந்து தீங்கு இழைப்பவர்களை நாம் திரும்ப திரும்ப மன்னிக்க தயாராக இருக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
"நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன் பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?" என்று தலைவர் தன்னிடம் கடன்பட்டவனிடம் கூறுவதைக் காண்கின்றோம்.

இரக்கம், மன்னிப்பு ஆகிய இரண்டின் ஆணிவேரான அன்பை நாம் என்றும் பிறரிடம் கொண்டிருக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,

மேட்டூர் அணையில் குறைந்துவரும் நீர் மட்டம் காவேரி டெல்டா விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகாவில் காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,

குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, NEET தேர்வினால் நேர்ந்திடும் தொடரும் தற்கொலைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு நல்ல முடிவினை எடுக்க வேண்டியும், அனைத்து குழந்தைகளின் நல்ல எதிர்கால வாழ்விற்காகவும் குழந்தை இயேசுவிடம் வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

02/04/2023
Our Church Crib
25/12/2022

Our Church Crib

13/04/2022
Palm Sunday Procession in Antoniyarpuram and Amalinagar.
11/04/2022

Palm Sunday Procession in Antoniyarpuram and Amalinagar.

Address

Dindigul

Telephone

+919994193340

Website

Alerts

Be the first to know and let us send you an email when St.Antony The Hermit's Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St.Antony The Hermit's Church:

Share