11/05/2026
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
#கோவில்திருமாளம் (அம்பர்மாகாளம்) #சோமயாகப்பெருவிழா 22.05.2026-வெள்ளிக்கிழமை
22.05.2026-Friday
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
#பறை_அடித்து_அவிர்ப்பாகம்_ஏற்கவரும்-அருள்மிகு #தியாகராஜபெருமான் ( #சிவபெருமான்)தலையில் மதுகுடம் ஏந்தி அன்னை #நீலோத்பலாம்பிகை ( #விழா_பத்திரிக்கைஇணைக்கப்பட்டுள்ளது).
Folklore festival - A wonderful holistic play (Leela) to get Sri Somasimara nayanar Yagya Avirpagam where Sri Thiyagaraja Swamy in the form of Village man by playing drum, Sri Nelothbalambiagi As Village women by bearing Pot on her head. God vinayaga and murugar as their Kids.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
22.05.2026-திருஅம்பர்மாகாளம் மதியம் 12மணி- #சோமாசி_மாறநாயனாரிடம்_சுவாமி_அவிர்ப்பாகம்_பெற்ற_ஐதீகவிழா
காலை 5.30 மணிக்கு அருள்மிகு- #தியாகராஜபெருமான்_அபிஷேக_ஆராதனை
🌿🪷🌿🪷🌿🪷🌿🪷🌿🪷🌿
காலை9மணி-ஆயில்ய_நட்சத்திரத்தில்- #விநாயகப்பெருமான்,எம்பிரான்- #சுந்தரமூர்த்தி_சுவாமிகள், #பரவைநாச்சியார், #சோமாசிமாறநாயனார், #சுசிலாம்பாளுடன்_யாகவேள்வி_நடத்த_யாகசாலை எழுந்து அருளல்
🌿🪷🌿🪷🌿🪷🌿🪷🌿🪷🌿
நண்பகல்12-அருள்மிகு- #தியாகராஜபெருமான் இறந்த கன்றை தோளில் தாங்கி 4 வேதங்களையும் 4 நாய்களாக மாற்றி அன்னை #நீலோத்பலாம்பிகை தலையில் மது குடம் ஏந்தி விநாயகர் முருகர் இருவரையும் குழந்தைகளாக மாற்றி இந்திராதி அஷ்டதிக்பாலகர்கள் கொம்பு தாரை தப்பட்டை முழங்க அதிகாரநந்தி கணங்களுடன் #பவளக்கால்_மஞ்சத்தில் புறப்படுதல், #அவிர்பாகம்_பெறுதல்.
#சோமாசி_மாறநாயனாருக்கு-எம்பெருமான்-உமாதேவியருடன் #ரிஷபரூடராய் காட்சி அளித்தல்.
🌿🪷🌿🪷🌿🪷🌿🪷🌿🪷🌿
#விழா_வரலாறு (திருக்கோயில்_புராணம்)
எம்பிரான்_சோமாசிமாறநாயனார்,நாள்தோறும் எம்பிரான் சுந்தரர்பெருமானுக்கு_அவர்_திருவாரூரில் இருந்தபோது உணவுக்குத்_தூதுவளை_கீரை_கொண்டுவந்து தரும் தொண்டைச் செய்து வந்தார். சுந்தரரின் துணைவியாரான எம்பிராட்டி_பரவையாரும் அதை நன்கு சமைத்துப் பரிமாற, எம்பிரான் சுந்தரர் பெருமான் விரும்பிச் சாப்பிட்டு வந்தார். ஒரு நாள் எம்பிரான் சுந்தரர் "நாள்தோறும் இக்கீரை_கொணர்ந்து தருபவர் யார்?" என்று_கேட்டு,சோமாசிமாறரைப் பற்றியறிந்து நேரில் கண்டு, அவர் விருப்பம் யாது என வினவினார்.
அதற்கு எம்பிரான் சோமாசிமாறர்,தான் செய்யவிருக்கும் சோமயாகத்திற்குத் திருவாரூர்தியாகேசப் பெருமான் எழுந்தருளி அவிர்ப்பாகம் பெற்றுக் கொள்ள வேண்டும்" என்றும் அதற்குச் சுந்தரர் பெருமான் உதவ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். மறுக்க விரும்பாத எம்பிரான் சுந்தரர், சோமாசிமாறரை அழைத்துக்கொண்டுத் திருவாரூர்ப் பெருமானிடம் வந்து வேண்டுகோளைத் தெரிவித்தார்.அதற்கு இசைந்த இறைவன், "தான்வரும் வேடம் தெரிந்து இவர் எனக்கு_அவிர்ப்பாகம் தர வேண்டும்" என்று பணித்தார்; சோமாசிமாறரும் அதற்குச் சம்மதித்தார். .
யாகம் நடைபெறும் இடத்திற்குத் தியாகராசப்பெருமான்,புலையர்_வேடத்தில்,நான்கு_வேதங்களையும் நான்கு நாய்களாக்கி உடன் பிடித்துக்கொண்டு, தோளில் இறந்து போன கன்றினைப் போட்டுக்கொண்டு, தடித்த பூணூலணிந்து, தலையில்_தலைப்பாகை (முண்டாசு) கட்டிக்கொண்டு, விநாயகரையும், முருகப்பெருமானையும்_சிறுவர்களாக்கிக்_கொண்டு,உமாதேவியை புலையச்சி வேடத்தில் தலையில் கள்குடம்_ஏந்தியவாறு_அழைத்துக்கொண்டு வந்தார்; இக்கோலத்தில் வந்த இறைவனைப் பார்த்து, எல்லோரும் அபசாரம் நேர்ந்து விட்டதென்று எண்ணியும், இக்கோலத்தைக் கண்டு பயந்தும் ஓடினர். ஆனால் சோமாசிமாறரும் அவர் மனைவியாரும் அவ்விடத்திலேயே (அச்சத்துடன் நிற்க - தந்தையார் வருவதைக் குறிப்பால் விநாயகர் சோமாசிமாறருக்கு உணர்த்தி அவர்கள் அச்சத்தை நீக்கினார்) நின்று இறைவனை அந்த வடிவிலேயே வீழ்ந்து வணங்கி வரவேற்க இறைவன் மகிழ்ந்து சோமாசிமாறருக்குக் காட்சி தந்து அருள்புரிந்தார் என்பது தலவரலாறு.
சோமாசிமாறருக்குக் காட்சிக் கொடுத்து அருள்புரிந்த_மூர்த்தமே "காட்சிகொடுத்த நாயகர்" எனப் போற்றப்படுகின்றார்
🌿🪷🌿🪷🌿🪷🌿🪷🌿🪷🌿
இறைவன் யாகத்திற்கு எழுந்தருளியபோது அம்பிகையின் தலையிலிருந்த கள்குடம் பொங்கிய இடம் "பொங்கு சாராயநல்லூர்" (இன்று வழக்கில் "கொங்கராயநல்லூர்")என்றும்,இறைவன் சுமந்து வந்த பறை தானாக அடிப்பட்ட இடம் "அடியுக்க மங்கலம்" (இன்று வழக்கில் "அடியக்கமங்கலம்") என்றும், இறந்தக் கன்றை ஏந்திய இடம் "கடாமங்கலம்" என்றும் இன்றும் வழங்குகின்றது. வழி- பேரளம் - திருவாரூர் இரயில் பாதையில் பூந்தோட்டம் நிலையத்திலிருந்து 4-கி.மீ. தூரத்தில் உள்ளது.
🌿🪷🌿🪷🌿🪷🌿🪷🌿🪷🌿
நன்றி சிவ நாராயணசாமி சிவா
திருச்சிற்றம்பலம்