Bishop in Anglican Church of India

Bishop in Anglican Church of India Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bishop in Anglican Church of India, 13 Thiru mullai book Street, Chennai.

26/09/2019

இன்றைய மன்னா

26 /செப்டம்பர்/2019/வியாழக்கிழமை

விசுவாசத்தில் உறுதியாயிருத்தல்

அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்த வர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள். (யோவான் 19:40)

வேதவாசிப்பு:-
யோவான் 19:38-42

டெஸ்மாண்ட் டாஸ் என்பவர் இரண்டாம் உலகப்போருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் யுத்தம் செய்பவனாக அல்ல. அவனுடைய மத நம்பிக்கை அவனை துப்பாக்கியேந்தி செல்வதை அனுமதியாததால், டாஸ், போர் வீரர்களுக்கு மருத்துவ சேவை செய்தான். ஒரு யுத்தத்தின் போது, எதிரிகளின் மும்முரமான துப்பாக்கி குண்டுகளையும் தாண்டி, எழுபத்தைந்து காயமுற்ற வீரர்களை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றான். அவனுடைய கதை ஒரு செய்தி படமாக வெளியிடப்பட்டது. ஹேக்சா ரிட்ஜ் என்ற திரைப்படமாகவும் வெளியானது.

கிறிஸ்தவ விசுவாச வீரர்களின் பட்டியலில் இத்தகைய தைரியமான நபர்களானள் ஆபிரகாம், மோசே, தாவீது, எலியா, பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறுகின்றன. ஆனாலும் பாராட்டப்படாத விசுவாச வீரர்களானள் அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும், நிக்கொதேமுவும், யூத மதத் தலைவர்களால் தங்களுக்கு ஆபத்து நேரிடும் அபாயம் இருந்த போதிலும், இவர்கள் இயேசுவின் சரீரத்தை கேட்டு வாங்கி, யூதர்களின் முறைமையின் படியே அடக்கம் பண்ணினார்கள் (யோவா. 19:40-42). யூதருக்கு பயந்து இயேசுவின் அந்தரங்க சீடனாக இருந்த யோசேப்புக்கும், இரவு நேரத்தில் மட்டுமே இயேசுவைச் சந்தித்த நிக்கொதேமுவுக்கும், இது ஒரு தைரியமான செயல். (வச .38-39). இதில் இன்னும் நம்மைக் கவர்வது என்னவெனில், இயேசுகிறிஸ்து வெற்றியாக கல்லறையிலிருந்து உயிர்த்தெழுவதற்கு முன்னரே இவர்கள் தங்கள் விசுவாசத்தை உறுதியாய் வெளிப்படுத்தினார்கள். ஏன் ?

இயேசுவின் மரணம் நேர்ந்த விதமும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளுமே (மத். 27:50-54) பயந்திருந்த இந்த சீடர்களின் விசுவாசத்தை முற்றிலும் உறுதிபடுத்தின. அவர்கள் மனிதனுக்கு பயப்படுவதைக் காட்டிலும், தேவனுக்குத் தங்களை அர்ப்பணிக்க கற்றுக் கொண்டனர். நாமும் இவர்களைப் போன்று, தேவன் மீதுள்ள விசுவாசத்தின் பொருட்டு, நமக்கு ஆபத்து நேரிடுவதாயினும் ,தைரியமாக செயல்பட்டு, மற்றவர்களுக்கு இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவோம்.

இயேசுவின் மீதுள்ள விசுவாசத்திற்காக எப்படி தைரியமாக வாழ்ந்திருக்கின்றாய் ?
வேறென்ன வகைகளில் தைரியமாக செயல்பட்டு, இவ்வுலகிற்கு இயேசு மீதுள்ள நம்பிக்கையை காண்பிக்க முடியும்?

சிந்தனைக்கு:-
பயமின்றி இருத்தல் தைரியமல்ல, பயத்தை மேற்கொள்வதே தைரியம்.- (நெல்சன் மண்டேலா)

Rt.Rev.Gladstone

First one is pencil drawing.
26/09/2019

First one is pencil drawing.

Address

13 Thiru Mullai Book Street
Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bishop in Anglican Church of India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share