Hail Mary Full of Grace

Hail Mary Full of Grace Hail Mary full Of grace..

பரிசுத்த ஆவியானவர் நமக்கு உற்ற துணையாளர்யோவான் 14:15,1615. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்...
07/02/2026

பரிசுத்த ஆவியானவர் நமக்கு உற்ற துணையாளர்

யோவான் 14:15,16

15. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
16. நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

விளக்கவுரை:

தேற்றரவாளர் என்றால், நமக்காகப் பரிந்து பேசுபவர் என்று பொருள். அதாவது, நமக்காக வாதாடுகின்ற ஒரு வழக்கறிஞர் எனவும் பொருள் கொள்ளலாம். எப்பொழுதும் குற்றம் சாட்டுகின்ற சாத்தானுக்கு எதிராக வாதிடுகின்றவர். இதைத்தான் இயேசுகிறிஸ்து உலகத்தில் இருந்தபொழுது செய்து வந்தார். நமக்காக ஒரு வழக்கறிஞர் போலச் செயல்பட்டார். அவர் உயிர்த்தெழுந்து பரலோகம் சென்ற பின், நமக்காக மற்றொரு நிலையான தேற்றரவாளரை அல்லது வழக்கறிஞரை அனுப்பினார்.

அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான். (வெளிப்படுத்தின விசேஷம் 12:10)

என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். (1 யோவான் 2:1)

யோவான் 17:12

நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக் கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.

விளக்கவுரை:

கடவுளுடைய ஒரு உன்னதமான கொடை, “ஒரு மனிதன் தன் பாவத்தை விட்டு விட்டு, உண்மையாக மனம் திரும்புவானேயாகில், பரிசுத்த ஆவியானவர் அவனுக்காக பிதாவினிடத்திலே வாதாடி (பரிந்து பேசி), அவனுடைய பாவங்களை முற்றிலுமாக அற்றுப்போகச் செய்கின்றார்.”

பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். (அப்போஸ்தலர் 2:38)

பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார். (லூக்கா 11:13)

கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. ( 2 கொரிந்தியர் 3:17)

யோவான் 14:17

17. உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும், அறியாமலும், இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

விளக்கவுரை:

சத்தியத்தை கடைபிடிப்பவர்கள் மட்டுமே அவரை அறியமுடியும். அவர்கள் அனைவரும் நவமான பாசையில் பேசுவார்கள். நவபாசை கடவுளுடைய முக்கியமான ஒரு அடையாளம் அல்லது முத்திரை. நவபாசை பேசாத ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள் எல்லாம் பொய்யர்கள். அவர்களெல்லாம் வெள்ளாடுகள்.

யோவான் 14:26,18,19

26. என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளரே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார் .
18. நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன், உங்களிடத்தில் வருவேன்.
19. இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்கள் பிழைப்பீர்கள்.

விளக்கவுரை:

இயேசுகிறிஸ்து மரித்தோரிடத்திலிருந்து உயிர்த்தெழுந்தது போல், நீங்களும் உயிர்த்தெழுவீர்கள்.

யோவான் 14:20

20. நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.

உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். (1 கொரிந்தியர் 6:19,20)

விளக்கவுரை:

பரிசுத்த ஆவியைப் பெற்ற ஒரு கிறிஸ்தவன், அவருக்கு கீழ்ப்படிய வேண்டும். அப்பொழுது தான் எல்லாவற்றையும் கற்றுத்தருவார். அதேநேரத்தில், விசுவாசிகளுடைய செயல்கள் மேய்ப்பர்களுக்கு கோபத்தையும், எரிச்சலையும் கொடுக்கக்கூடியதாக இருக்கக்கூடாது. சில நேரங்களில், மேய்ப்பர்கள் சபிக்கும் அளவிற்கு சில விசுவாசிகள் நடப்பதை பார்க்கின்றேன். சில சிறுவர்கள், எலிசாவை கேலி பண்ணியதால், கடவுளுடைய நாமத்தில் அவர்களைச் சபித்தார். இது இருவருக்குமே நல்லது அல்ல. பரிசுத்த ஆவியை பெற்ற ஒரு கிறிஸ்தவன், இயேசுவைப் போல, பரிசுத்த ஆவியைப் போல பரிந்து பேசுபவனாக இருக்க வேண்டும்.

ஆகவே, ஒரு விசுவாசி, உண்மையான மேய்ப்பனை கோபப்படுத்தவோ அல்லது தன்னை சபிக்கும் அளவிற்க்கோ நடந்து கொள்ளக்கூடாது. மேலும், சபைக்குள் அரசியல் செய்யக்கூடாது. (சபைக்குள் தவறான குழுக்களை கொண்டு வருதல், தன்னுடைய ஜாதி, தன்னுடைய இனம், தன்னுடைய பகுதியை (ஊர், மாவட்டம், மாநிலம்) சேர்ந்தவன், சொந்தக்காரர்கள், நன்றாக தெரிந்தவர்கள், தவறான காம நடவடிக்கை, போன்றவைகள்.) கடவுளின் கோபாக்கினை அவர்கள் மேல் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் சபையை விட்டு போவது, அவர்களுக்கு நல்லது.

அவன் (எலிசா) அவ்விடத்தைவிட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழிநடந்துபோகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ, என்று சொல்லி நிந்தித்தார்கள்.
அப்பொழுது, அவன் (எலிசா) திரும்பி அவர்களைப் பார்த்து: கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது. (2 இராஜாக்கள் 2:23,24)

நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை.

மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.

சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம் போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால்,

தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். (யாக்கோபு 5:16-20)

ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார். (ரோமர் 8:27)

விளக்கவுரை:

ஒருவன் கிறிஸ்துவுக்குள் என்ன நோக்கத்திற்காக இருக்கிறான் என்பதை, அவனுடைய உள்மனதின் எண்ணங்களை கொண்டு கடவுள் அறிவார். அவன், தன்னை மகிமைப்படுத்தவா அல்லது கடவுளை மகிமைப்படுத்தவா அல்லது பணத்திற்க்காகவா அல்லது உலக காரியங்களுக்காகவா – இவை போன்ற அவனுடைய எண்ணத்தின் படியே, கடவுள் அவனுக்குச் செய்கின்றார்.

கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;
வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். (கொலோசெயர் 3:16,17)

ஆலோசனை அருளும் ஆவி.முந்தையப்பதிவு, உணர்வை அருளும் ஆவி அதனுடைய தொடர்ச்சி, ஆலோசனை அருளும் ஆவி.3. ஆலோசனை அருளும் ஆவிஆலோசனை ...
06/02/2026

ஆலோசனை அருளும் ஆவி.
முந்தையப்பதிவு, உணர்வை அருளும் ஆவி அதனுடைய தொடர்ச்சி, ஆலோசனை அருளும் ஆவி.

3. ஆலோசனை அருளும் ஆவி

ஆலோசனை என்பது,
தனி மனிதனுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண அல்லது சரிசெய்ய ஆலோசனை வழங்குதல்.
சொந்த பாதுகாப்பிற்காகவோ அல்லது சத்துருவிற்கு எதிராகவோ ஆலோசனை செய்தல்.
பொருத்தமான, நடைமுறைப்படுத்தக்கூடிய யோசனை சொல்லுதல்,
போதனை, கட்டளை, ஆணை,
உடன் உழைப்பாளர்களுக்கு எச்சரிக்கை செய்தல், போன்றவைகள்.

கடவுளும் ஆலோசனையும்

…. அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர். (ஏசாயா 28:29)

ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது. (நீதிமொழிகள் 8:14)

நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர்.

நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான ஸ்தலங்களை எடுப்பிப்பவர். (ஏசாயா 44:25, 26)

யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய கிரியையின் பலனுக்குத் தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன. (எரேமியா 32:19)

மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும். (நீதிமொழிகள் 19:21)

மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். (நீதிமொழிகள் 12:15)

விளக்கவுரை:

கடவுளையே நம்பி இருப்பவர்களுக்கு, ஆலோசனை கடவுளிடமிருந்து வரும். அவனவனுக்கு, அவனவனுடைய வழிகளுக்கு தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தக்கதாகவும் அளிக்கப்படும். நாம் இறந்த மனித ஆவியிடமிருந்தோ, நட்சத்திரங்களையோ, சந்திரனையோ வைத்து குறி சொல்பவர்களிடமிருந்தோ ஆலோசனை பெறக்கூடாது.

உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசை கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும். (ஏசாயா 47:13)

நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர். (ஏசாயா 44:25)

விளக்கவுரை:

மோயீசன் போல, எந்த ஒரு காரியத்திற்கும் கடவுளிடம் ஆலோசனை கேட்கவேண்டும். கடவுள் தன்னுடைய ஊழியன் மூலமாகவோ, காட்சி, கனவுகள், வியாக்கியானம் மூலமாகவோ நமக்கு ஆலோசனை வழங்குவார். சில நேரங்களில், ஆலோசனைப் பெற கால தாமதமானாலும், மிகப் பொறுமையோடு உபவாசத்திலும், ஜெபத்திலும் பாவ மன்னிப்பு கேட்பதிலும் நிலையாக இருந்து, கடவுளிடமிருந்து ஆலோசனைப் பெறவேண்டும். நீங்கள், நம்பிக்கையை ஒருபோதும் இழக்கவே கூடாது.

கிறிஸ்துவினுடைய திருத்தூதர் புனித பவுல், ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் கொடுக்கும் ஆலோசனை:

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.

ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,

சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.

நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும்காலம் வந்தது.

நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.

இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு.

ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப்பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்.

லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.

தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன்.

துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.

கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.

நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன்.

நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக்கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.

கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியார் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.

கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம (பரலோக) ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் வீட்டாருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு.

எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்.

மாரிகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஜாக்கிரதைப்படு. ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லாச் சகோதரரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென். (2 தீமோத்தேயு 4:2-22)

நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களுமாயிருந்து,

உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.

ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு:

நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.

அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான். (எபிரேயர் 6:11-15)

நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். (வெளிப்படுத்தின விசேஷம் 3:18)

விளக்கவுரை: (கலிக்கம்)

கண்ணுக்கு வலுவூட்டுகின்ற, பார்வை கொடுக்கக்கூடிய மருந்து. வேதாகமத்தில் (கலிக்கம்), இது மனிதனுக்கு தெளிவூட்டுகின்ற, அறிவூட்டுகின்ற, வேத சத்தியமாக, வேத கட்டளையாக இருக்கின்றது.

மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.

இது எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,

களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.

பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். (மாற்கு 7:20-23)

இப்படிப்பட்ட விரிவான நுண்ணாய்வு, ஆவியிலே பேதைமையை (குருட்டாட்டம்) போக்கி, நம் கண்களுக்கு ஒளி (கட்டளைகள்) என்ற துயர் தீர்க்கும் மருந்தாக அமைந்துவிடும்.

நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒருகுறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;

நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.

நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. (வெளிப்படுத்தின விசேஷம் 3:17-19)

கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. (சங்கீதம் 19:8)

அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. (யோவான் 1:4)

மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். (யோவான் 8:12)

விளக்கவுரை:

மேலே கூறப்பட்ட வேதவசனமாகிய, வெளிப்படுத்தின விசேஷம் 3:17-19, சங்கீதம் 19:8, யோவான் 1:4, யோவான் 8:12 – ன் படி
ஆவியிலே (குருட்டாட்டம்) பேதைமை உள்ளவர்களாய் இருக்கக் கூடாது. இயேசு உலகத்திற்கு ஒளியாக இருக்கின்றார். அவரைப் பின்பற்றுகிறவன் இருளில் நடவாமல், ஜீவஒளியை அடைந்திருப்பான். அந்த ஜீவ ஒளியே, நம் கண்ணிற்கு ஒளி (கட்டளைகள்) என்ற துயர் தீர்க்கும் மருந்தாக அமைகின்றது.

சுவிசேஷனுடைய வேலையைச் செய். உன் ஊழியத்தை நிறைவேற்று.

எல்லாவற்றையும் முடிந்தவரை கடவுளுடைய ஆலோசனையோடு செய்ய முயற்சி செய்.

குறிப்பு: அடுத்தப்பதிவு,
4. பெலனை அருளும் ஆவி.

உணர்வை அருளும் ஆவிமுந்தையப்பதிவு, ஞானத்தை அருளும் ஆவி, அதனுடைய தொடர்ச்சி, உணர்வை அருளும் ஆவி.2. உணர்வை அருளும் ஆவி (unde...
05/02/2026

உணர்வை அருளும் ஆவி
முந்தையப்பதிவு, ஞானத்தை அருளும் ஆவி, அதனுடைய தொடர்ச்சி, உணர்வை அருளும் ஆவி.

2. உணர்வை அருளும் ஆவி (understanding) (புரிந்துகொள்ளுதல், மனதினால் உணரும் திறன்.)

ஓசியா 4:14

……உணர்வில்லாத ஜனங்கள் அதினால் சிக்குண்டு விழுவார்கள்.

விளக்கவுரை:

இன்று பல கிறிஸ்தவர்கள் தவறான பாதையில் செல்வதற்கு அறியாமையே காரணமாக இருக்கின்றது. கடவுளுடைய ஆவியைப் பற்றிய உணர்வு இல்லாததே இதற்குக் காரணம். மனிதனையும், இவ்வுலகையும் இருள் சூழ்ந்திருப்பதற்கும் இதுவே காரணமாக அமைகின்றது.

பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும். (2 தீமோத்தேயு 2:26)

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்க்காக பல சிரமங்களை ஏற்றுக்கொள்ளுகிறார்கள். இதை உணர்ந்த பிள்ளைகள், தங்கள் பெற்றோர்களின் கனவை நனவாக்க சிரமப்பட்டு உழைக்கின்றார்கள். சில குழந்தைகள் இதை உணராமல், தீய வழிகளில் சென்று, பெற்றோர்களுக்கு சொல்லொண்ணா துன்பத்தைக் கொடுத்துவிடுகிறார்கள்.

கடவுளை அறிந்துகொள்ள, அவர் இந்த உலகத்தைப் படைத்ததின் முக்கிய நோக்கத்தை நீங்கள் உணர வேண்டும். இவ்வுலகத்தை ஏவாள் கெடுத்தபொழுது, அதைச் சரிசெய்ய இயேசு கிறிஸ்து தானே முன்வந்து, தன்னைக் கடினமானச் சாவுக்கு ஒப்புக்கொடுத்தார். சாத்தானின் (பாவத்தின்) அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்டார். இது, தன் படைப்பின் மீது, அவர் கொண்ட ஈடற்ற அன்பை வெளிப்படுத்துகின்றது. இதை மனிதன் உணர்ந்து கொண்டால், கடவுளின் உன்னத போதனைகளின்படி நடப்பான்.

ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். (எபேசியர் 5:17)

உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.

எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.

கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும். (சங்கீதம் 119: 73, 34, 169)

தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், (சாவி என்றால், நெல் மற்றும் கோதுமை போன்றவற்றின் கதிர்கள், நீர் பற்றாக்குறையின் காரணமாக விளையாமல் போய்விடுதல், வெட்டுக்கிளிகள் (விட்டில்கள்) கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை தின்றுவிடும், பச்சைக் கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து, விளைந்த தானியங்களை தின்றுவிடும்) அவர்கள் சத்துருக்கள் தேசத்திலுள்ள பட்டணங்களை முற்றிகைபோடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வருகிறபோதும்,

உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனுஷனானாலும் தன் இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்துக்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,

உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,

தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படிக்கு தேவரீர் ஒருவரே எல்லா மனுபுத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத்தக்கதாகச் செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக. (1 இராஜாக்கள் 8:37, 38, 39, 40)

அவர்கள் சிறைப்பட்டுப் போயிருக்கிற தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமம்பண்ணி, துன்மார்க்கமாய் நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கி வேண்டுதல் செய்து,

தங்களைச் சிறைபிடித்துக் கொண்ட தங்கள் சத்துருக்களின் தேசத்திலே தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம்பண்ணும்போது,

உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து,
உம்முடைய ஜனங்கள் உமக்கு விரோதமாய்ச் செய்த பாவத்தையும், அவர்கள் உம்முடைய கட்டளையை மீறிய அவர்கள் துரோகங்களையும் எல்லாம் மன்னித்து, அவர்களைச் சிறைபிடித்துக் கொண்டுபோகிறவர்கள் அவர்களுக்கு இரங்கத்தக்கதான இரக்கத்தை அவர்களுக்கு கிடைக்கப்பண்ணுவீராக. (1 இராஜாக்கள் 8:47, 48, 49, 50)

நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.

உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.
(சங்கீதம் 119: 125, 144)

விளக்கவுரை: (சங்கீதம் 119: 125, 144)

கடவுள் இருக்கின்றார் என்பதற்கு, பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் ஏராளமான சாட்சிகள் இருக்கின்றன. பாரவோன், இஸ்ராயேல் மக்களை, கொத்தடிமைகளாக நடத்தியதால், எல்லாம் வல்ல இறைவன், எகிப்து தேசத்தை பல வித கொடூரமான வாதைகளால் வாதித்தார்.

“அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசமெங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.” (யாத்திராகமம் 12:12)

பழைய ஏற்பாட்டில், கடவுள் தன் தீர்க்கதரிசிகளின் வாயிலாக கூறப்பட்ட, எல்லாத் தீர்க்கதரிசனங்களும் நிறைவேறியுள்ளன.

உதாரணத்திற்கு, ஏசாயாவில் எழுதப்பட்டபடியே, கன்னி மரியாளிடத்திலிருந்து இயேசு கிறிஸ்து பிறந்தார்.

“ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்." (ஏசாயா 7:14)

மேலும், சங்கீதத்திலும், சக்கரியாவிலும் முன்னறிவிக்கப்பட்டபடியே, இயேசு கிறிஸ்து, தன் நண்பனால் முப்பது வெளிக்காசுகளுக்காக காட்டி கொடுக்கப்பட்டார்.

“என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.” (சங்கீதம் 41:9)

உங்கள் பார்வைக்கு நன்றாய்க்கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்.

கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன். (சகரியா 11:12, 13)

மேலும், அவருடைய பாடுகள் எப்படி இருக்கும் என்பதை ஏசாயா முன்னறிவித்தார்.

நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார். (ஏசாயா 53:6, 7, 8)

இப்படிப்பட்ட சாட்சிகளின் மூலம் கடவுள் இருக்கின்றார் என்பதை நம்பி, நம்மை மீட்டுக்கொள்வார் என்பதை உணர்ந்து, அவர் வார்த்தைகளின் (கட்டளைகளின்) படி நடக்க கற்றுக்கொள்வோம்.

குறிப்பு: அடுத்தப்பதிவு,

3. ஆலோசனை அருளும் ஆவி.

கடவுளின் ஏழு ஆவிகள்ஏசாயா 11:1, 21. ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்ப...
04/02/2026

கடவுளின் ஏழு ஆவிகள்

ஏசாயா 11:1, 2
1. ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.

விளக்கவுரை:

இயேசுகிறிஸ்து, ஈசா வேர்களிலிருந்து வந்த, தாவீதின் வம்சத்திலிலுந்து வந்தவர். ஈசா வேர்களிலிருந்து, ஒரு கிளை எழும்பி செழிக்கும்: அந்த கிளைதான் இயேசுகிறிஸ்து. அவரிடம்,
2. ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.

சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்; (மத்தேயு 1:5, 6)……

இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம். (மத்தேயு 1:17)

இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். (மத்தேயு 1:18, 16, 19-21)

அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். (லூக்கா 1:34,35)
தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. (மத்தேயு 1:22)

கர்த்தருடைய ஏழு ஆவிகளும், அவற்றின் செயப்பாடுகளுமாவன,

1. ஞானத்தை அருளும் ஆவி
2. உணர்வை அருளும் ஆவி
3. ஆலோசனை அருளும் ஆவி
4. பெலனை அருளும் ஆவி
5. அறிவை அருளும் ஆவி
6. கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தை அருளும் ஆவி
7. கர்த்தருடைய ஆவியானவர்

1. ஞானத்தை அருளும் ஆவி

ஞானத்தை அருளும் ஆவியானவர் (கடவுளுடைய இரகசியங்களை அறியும் ஆவி), கடவுளுடைய மறைக்கப்பட்ட உண்மைகளை, ஆவியில் உள்ள மனிதர்களுக்கு, அவர்கள் ஆவியில் உள்ள ஆழத்தைப் பொறுத்து, கடவுளுடைய மறைக்கப்பட்ட மறைபொருட்களைக் கூறுவார். ஒருவன் இந்த மறைக்கப்பட்ட உண்மைகளை தெரிந்து கொள்வானேயாகில், அது அவன் பரலோகம் செல்வதற்குப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், சாதாரண அல்லது தேவனுடைய ஆவி இல்லாதவர்களுக்கு, இவைகள், அவர்கள் இறக்கும்வரை மறைபொருளாகவே இருக்கின்றது.

ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியிலே இரகசியங்களைப் பேசினாலும்,அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். (கொரிந்தியர் 14:2)

ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது. அது சந்தடியுள்ள தெருக்களின் சந்திலும், ஒலிமுகவாசலிலும் நின்று கூப்பிட்டு, பட்டணத்தில் தன் வார்த்தைகளை வசனித்துச் சொல்லுகிறது:
பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.
என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன்; என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். (நீதிமொழிகள் 1:20-23)

ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை. (பிரசங்கி 7:12)
உயிரோடிருக்கிற எல்லாரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவுக்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது. (தானியேல் 2:30)
உம்முடைய ராஜ்யத்திலே ஒரு புருஷன் இருக்கிறான், (தானியேல்) அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது; உம்முடைய பிதாவின் நாட்களில் வெளிச்சமும் விவேகமும் தேவர்களின் ஞானத்துக்கு ஒத்த ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது; ஆகையால் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவானவர் அவனைச் சாஸ்திரிகளுக்கும் ஜோசியருக்கும் கல்தேயருக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் அதிபதியாக வைத்தார்.
உனக்குள்ளே தேவர்களின் ஆவி உண்டென்றும், வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன். (தானியேல் 5:11, 14)

ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். (அப்போஸ்தலர் 6:3)
பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. (யாக்கோபு 3:17)
அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 5:12)
இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு. (வெளிப்படுத்தின விசேஷம் 13:18)
ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம். (வெளிப்படுத்தின விசேஷம் 17:9)

விளக்கவுரை:

இப்படிப்பட்ட மறை உண்மைகளை அறிவதற்க்கு ஞானம் தேவை. இது எல்லாம் வல்ல இறைவனிடத்திலிருந்து வருகின்றது. ஒவ்வொரு மனிதனும் இதை அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும்.
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். (யாக்கோபு 1:5)
குறிப்பு: அடுத்தப் பதிவு,

1. உணர்வை அருளும் ஆவி (புரிந்து கொள்ளுதல், மனதினால் உணரும் திறன், புத்தி)

ஆவியின் கனிகள்கலாத்தியர் 5:22-2322. ஆவியின் கனியோ,1) அன்பு, (தன்னலமற்ற)நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம்...
02/02/2026

ஆவியின் கனிகள்

கலாத்தியர் 5:22-23

22. ஆவியின் கனியோ,
1) அன்பு, (தன்னலமற்ற)
நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம். (கலாத்தியர் 6:9-10)

2) சந்தோஷம், (பெருமகிழ்ச்சி)
அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோசத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். (எபிரெயர் 12:2)
நாமும் இந்த பூமியில் உள்ள பாடுகளையும், அவமானத்தையும் சகித்து, தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்போம் என்ற சந்தோஷத்தில், பெருமகிழ்ச்சியில் இருப்போம்.

3) சமாதானம்,
பரிசுத்தஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. (ரோமர் 15:13)
இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். (ரோமர் 5:1)

4) நீடியபொறுமை, (விடாமுயற்சி, பொறுமை)
உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். (எபிரெயர் 6:12)
ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; (எபிரெயர் 12:1)

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். (2 பேதுரு 3:9)
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள். (ரோமர் 12:12)

5) தயவு, (மென்மையாக, கண்ணியமாக, நிதானத்தோடு செயல்படுதல்)
ஒரு மனிதன் மற்றொரு மனிதனை, கண்ணியத்தோடு நடத்தவேண்டும். சாந்தம் என்பதை பணிவு என்றும் பொருள் கொள்ளலாம். பணிவு என்பது தாழ்ச்சியே தவிர பலவீனம் அல்ல.

6) நற்குணம் , (நற்குணம் என்பது செம்மையான இருதயத்தை குறிக்கின்றது)
நன்மையான எந்த சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. (யாக்கோபு 1:17)
ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். (எபேசியர் 5:9)
இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து (மத்தேயு 21:12)
இயேசு கிறிஸ்து, தவறுதலான நடவடிக்கைகளை சரி செய்கின்றார். அதையே நம்மிடமும் எதிர்பார்க்கின்றார். தேவாலயத்தில் நடக்கும் தவறுதலான நடவடிக்கைகளை, மிக முக்கியமாக, தவறு செய்யும் போதகர்களை இரக்கமின்றி கடிந்து கொள்ளவேண்டும்.

7) விசுவாசம்,
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. (எபிரெயர் 11:1)
அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 17:20)
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள். (எபிரெயர் 11:11)

இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான். (வெளிப்படுத்தின விசேஷம் 17:14)
நீங்கள் கட்டாயமாக கடவுளுடைய வார்த்தையில் முழுவிசுவாசம் வைக்கவேண்டும்.

8) சாந்தம்,
இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் (மத்தேயு 21:4) (ராஜாக்கள் ஒருபோதும் கழுதையின் மீது ஏறி வருவதில்லை. ஆனால், எல்லாம் வல்ல இறைவனுடைய ஒரே மகன் இயேசு கிறிஸ்து, கழுதையின் மீது ஏறி வந்தது என்பது, அவருடைய பணிவையே இங்கு காண்பிக்கின்றது.)

சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். (கலாத்தியர் 6:1-2)

9) இச்சையடக்கம் (சுயகட்டுப்பாடு, கடவுள் வழியில் பிரச்சனைகளை கையாள வேண்டும்)
“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு”, எந்த ஒரு தீய பழக்கத்திற்;கும் நீங்கள் அடிமை ஆகிவிடக்கூடாது. ஆகையால்,

நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,
ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,
தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.
ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. (2 பேதுரு 1:5-7,10)
இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

கலாத்தியர் 5:24-26

24. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
25. நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்.
26. வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.ஆதலால், மனிதர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்க தரிசனங்களுமாம்.
இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது;அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்;கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.
நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.
நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.
ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
(மத்தேயு 7:12-20)

மாமிசத்தின் கிரியைகளான, விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலியனவற்றை விட்டு விட்டு,

ஆவியின் கனிகளான, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் முதலியனவற்றை நீங்கள் கைக்கொள்ள வேண்டும்.

ஆவியின் கனிகளோ கடவுளிடமிருந்து வந்தது, மாமிசத்தின் கிரியைகளோ சாத்தானிடமிருந்து வந்தது. நாம் சாத்தானுடைய உடலை பெற்றிருப்பதால், நம்மிடம் அவனுடைய கிரியைகளை செய்கின்றான். நாமோ கடவுளுடைய கிரியைகளை செய்ய வேண்டும்.

நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற் கொண்டு மனுசகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். (யோவான் 8:44)

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். (யாக்கோபு 4:7-8)

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Hail Mary Full of Grace posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share