Iraivanin Arulmazhai

Iraivanin Arulmazhai ISLAM ORU INIYA MARKAM

01/06/2026

*﷽ உபதேசம் : 885*
*01.06.2026*
*திங்கட்கிழமை*

*அனஸ்(ரலி) அறிவித்தார்.*

*நபி(ஸல்) அவர்களுக்குப் பணி விடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான்.*

*எனவே, அவனை நோய் விசாரிக்க நபி(ஸல்) அவர்கள் அவனிடம் வந்து, அவனுடைய தலை மாட்டில் அமர்ந்து, 'இஸ்லாதை ஏற்றுக் கொள்!' என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான்.*

*அப்போது அவர், 'அபுல் காஸிம் (நபி(ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு' என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றான்.*

*உடனே நபி(ஸல்) அவர்கள், 'இச்சிறுவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே சகல புகழும்' எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.*

*புகாரி : 1356*

*அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி*

*சிறுவர்களின் தோழர் நபிகள் நாயகம்!*

01/06/2026

நோன்பு. [ 52 ]
*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையை, ரமளானிலும் ரமளான் அல்லாத காலங்களிலும் ஒரே மாதிரியாகத் தான் நமக்குத் தொழுது காட்டியுள்ளார்கள்.*

“ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?’ என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ரமாளானிலும், மற்ற மாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு ரக்அத்களுக்கு மேல் அதிகமாக்கியதில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும், நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விளக்கம் அளித்தார்கள்.
அறிவிப்பவர் :
அபூ ஸலமா (ரலி).
நூல்கள் : புகாரீ 2013.
முஸ்லிம் 1343.
🌖🌖🌖🌖🌖🌖🌖

01/06/2026

தொழுகை. { 218 }
*பெருநாள் தொழுகை - 5.*

*பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும் போது, ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.*

“பெருநாள் வந்துவிட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள்.” இதை ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 986.
⏰⏰⏰⏰⏰⏰⏰

01/06/2026

*﷽ உபதேசம் : 884*
*31.05.2026*
*ஞாயிற்றுக்கிழமை*

*அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.*

*நபி(ஸல்) அவர்கள் எங்களுடன் (இனிமையாகப்) பழகுவார்கள்.*

*எந்த அளவிற்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம் 'அபூ உமைரே! பாடும் உன்னுடைய சின்னக் குருவி (புள்புள்) என்ன ஆயிற்று?' என்று கூடக் கேட்பார்கள்.*

*புகாரி : 6129*

*அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி*

*சிறுவர்களின் தோழர் நபிகள் நாயகம்!*

30/05/2026

*﷽ உபதேசம் : 883*
*30.05.2026*
*சனிக்கிழமை*

*ஹஜ் பெருநாளுக்கு அடுத்து வரகூடிய தஷ்ரீக்குடைய நாட்கள்*

*(துல்ஹஜ் பிறை 11, 12, 13)*

*உண்பதற்கும்,*

*பருகுவதற்கும்*

*"இறைவனை நினைவுகூர்(ந்து திக்ர் செய்)வதற்கும்"*

*உரிய நாட்களாகும்.*

*நூல்: முஸ்லிம் 2099*

*அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி*

30/05/2026

நோன்பு. [ 51 ]
*இரவுத் தொழுகையை, ஒரே மூச்சில் இடைவெளியில்லாமல் தொழாமல், பிரித்துத் தொழலாம். ஒரு பகுதியைத் தொழுது விட்டு, வேறு வேலைகளில் ஈடுபட்டு விட்டு அல்லது உறங்கிவிட்டு எஞ்சியதைப் பின்னர் தொழலாம்.*

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷா தொழுகை நடத்திவிட்டுப் பின்னர் தம் வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள் தொழுதுவிட்டு உறங்கினார்கள்.” பின்னர் எழுந்து என்னை விசாரித்துவிட்டு “மீண்டும் தொழுகைக்காக நின்றார்கள்.” நானும் (அவர்களுடன்) அவர்களின் இடப் பக்கமாகச் சென்று நின்றேன். உடனே என்னை அவர்களின் வலப் பக்கத்தில் இழுத்து நிறுத்திவிட்டு (முதலில்) “ஐந்து ரகஅத்துகளும், பின்னர் இரண்டு ரகஅத்துகளும் தொழுதுவிட்டு, அவர்களின் குறட்டையொலியை நான் கேட்குமளவுக்கு ஆழ்ந்து உறங்கினார்கள்.”
இப்னு அப்பாஸ் (ரலி).
நூல்கள் : புகாரி 117.
முஸ்லிம் 1399.
🌖🌖🌖🌖🌖🌖🌖

30/05/2026

தொழுகை. { 217 }
*பெருநாள் தொழுகை - 4.*

*நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச் செல்வார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் குர்பானி பிராணியை அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.*

“சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.” மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதை அனஸ் (ரலி) அறிவித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 953.

“நோன்புப் பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.”
அறிவிப்பவர் :
புரைதா (ரலி).
நூல் : இப்னு
குஸைமா 1426.
⏰⏰⏰⏰⏰⏰⏰

30/05/2026

*﷽ உபதேசம் : 881*
*28.05.2026*
*வியாழக்கிழமை*

*நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன்முதலில் தொழுகையைத் துவக்குவார்கள்.*

*அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)*

*நூல்: புகாரி-956*

*அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி*

30/05/2026

நோன்பு. [ 50 ]
*இரவுத் தொழுகை, இரண்டிரண்டா? நான்கு நான்கா?*

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர், இரவுத் தொழுகை பற்றி என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார். மிம்பரில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இரவுத் தொழுகை இரண்டிரண்டாகத் தொழ வேண்டும் என்று விடையளித்தார்கள்.”
அறிவிப்பவர் :
இப்னு உமர்(ரலி).
நூல் : புகாரி 473.

ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! இரவுத் தொழுகை எப்படித் தொழ வேண்டும்?" எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகும்.” சுப்ஹு (நேரம் வந்துவிட்டது) பற்றி நீங்கள் அஞ்சினால் ஒரு ரக்அத் (வித்ர்) தொழுதுகொள்ளுங்கள்! என்று கூறினார்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
நூல் : முஸ்லிம் 1365.
🌖🌖🌖🌖🌖🌖🌖

Address

Dubai
Dubai

Alerts

Be the first to know and let us send you an email when Iraivanin Arulmazhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share